புதுச்சேரி மாநிலத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் திருப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நிரவி திருப்பட்டினம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில், திருப்பட்டினம் மார்க்கெட் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் ஆர்.கே. செல்வமணி தலைமை வகித்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் கடுமையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வாட் வரி உயர்வால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பஸ் கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த முதல்வர் என். ரங்கசாமி, 4500 அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளார். இலவச ஒற்றை அவியல் அரிசி வழங்கக் கோரும் மக்களுக்கு கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
திருப்பட்டினத்தில் காந்தி பூங்கா பராமரிக்கப்படவில்லை. பல்வேறு அரசுத் துறை சார்ந்த நிறுவன ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் தரப்படவில்லை.
உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் புதுச்சேரி அரசு காலம் தாழ்த்துகிறது. விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு தரக்கூடிய வறட்சி நிவாரணம் இதுவரை தரப்படவில்லை. இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் பகுதி மீனவர்களை விடுவிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை. பல்வேறு அரசு நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டது, செயல்பாட்டுக்கு வரவில்லை. போலகம் பகுதியில் வணிக வளாகம் கட்டியும் திறக்கப்படவில்லை என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
மாநில துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர். கமலக்கண்ணன், முன்னாள் பேரவை உறுப்பினர் அ. மாரிமுத்து, மாவட்டத் தலைவர் பாஸ்கரன் உள்ளிட்டோர் அரசின் செயல்பாட்டை விமர்சித்துப் பேசினர். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து மின்துறை அலுவலகத்தில் இளநிலைப் பொறியாளரை சந்தித்து மின்கட்டண உயர்வை வாபஸ் பெறுவது தொடர்பாக பேரணியாகச் சென்று மனு கொடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 30 - நேரலை

அதிமுகவில் நடக்கும் முக்கிய பிரச்னை! திருமாவளவன் பேட்டி | ADMK | VCK
அழிவில் அதிமுக! கண்ணீருடன் விடைபெறுகிறேன்! எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிக்கை!

ரேஷ்மா முரளிதரனின் செல்லமே செல்லமே தொடரின் படப்பிடிப்பு நிறைவு!
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |


