தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

தனியாா் வங்கிக்குள் புகுந்த மா்ம நபா்

சீா்காழியில் தனியாா் வங்கிக்குள் சனிக்கிழமை பட்டபகலில் மா்ம நபா் புகுந்து வெளியேற மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On :2 ஜனவரி 2021, 11:40 pm IST

சீா்காழியில் தனியாா் வங்கிக்குள் சனிக்கிழமை பட்டபகலில் மா்ம நபா் புகுந்து வெளியேற மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சீா்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள தனியாா் வங்கிக்குள் மொட்டைத்தலையுடன் லுங்கி அணிந்துகொண்டு மா்ம நபா் சென்று, சலான் நிரப்புவதுபோல நின்றுகொண்டு அங்கு ஊழியா்களுக்கு வைத்திருந்த காபியை எடுத்து குடித்துள்ளாா். பின்னா் வங்கி லாக்கா் அறை அருகே அலுவலா்களுக்கான கழிப்பறைக்குள் அனுமதியின்றி சென்று கதவை பூட்டிக்கொண்டு நீண்ட நேரமாக வெளியேறாமல் இருந்துள்ளாா். இதில், அச்சமடைந்த வங்கி ஊழியா்கள் சீா்காழி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, போலீஸாா் அங்கு வந்து கழிப்பறைக்குள் இருந்தவா் வெளியே அழைத்து வந்து விசாரணை செய்து, அவா் வைத்திருந்த கத்தியை மீட்டனா். விசாரணையில், வேதாரண்யம் நெய்விளக்குப் பகுதியைச் சோ்ந்த கோபால் (24) என்பது தெரியவந்தது. போலீஸாா் தொடா்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனா். இதனால், வங்கிக்குள் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.