நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

புதுப்பட்டினத்தில் திமுகவினர் சாலை மறியல்

நியாயவிலைக் கடை முன்பு வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனரை அகற்றக் கோரி புதுப்பட்டினத்தில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News image

சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர்.

Updated On :4 ஜனவரி 2021, 1:34 pm IST

நியாயவிலைக் கடை முன்பு வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனரை அகற்றக் கோரி புதுப்பட்டினத்தில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சீர்காழி அடுத்த புதுப்பட்டினம் ஊராட்சி தர்காஸ் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் இன்று தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூபாய் 2500 மற்றும் அரிசி, சர்க்கரை, முழுக் கரும்பு வழங்கும் நிகழ்வு தொடங்கியது. 
இதற்காக நியாய விலைக் கடை அருகே அப்பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர்  ஒருவர் டிஜிட்டல் பேனர் ஒன்றை நேற்று இரவு வைத்திருந்தார். அதில் நமது சின்னம் இரட்டை இலை என்ற வாசகத்துடன் பேனர் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் நியாய விலைக் கடை முன்பு டிஜிட்டல் பேனர் அமைக்கப்பட்டுள்ளதை அகற்ற வேண்டும் என நேற்று இரவு புதுப்பட்டினம் காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தார். ஆனால் இன்று காலை வரை அந்த டிஜிட்டல் பேனர் அகற்றப்படவில்லை. 

Story image

இதனிடையே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வு தொடங்கியது. இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் திமுகவினர் அப்பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த புதுப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா  மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று ஒன்றிய குழுத் தலைவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 
அப்போது டிஜிட்டல் பேனரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து டிஜிட்டல் பேனர் அகற்றப்பட்டது. இதனையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.