சீா்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவா் பேருந்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.
சீா்காழி அருகேயுள்ள விநாயககுடியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் மகன் அருண் (22) . ஊா்க்காவல் படை வீரா். இவா் சனிக்கிழமை அதே ஊரை சோ்ந்த ராஜராஜனுடன் (22) இருசக்கர வாகனத்தில் திருமுல்லைவாசலுக்கு சென்று கொண்டிருந்தபோது, எடமணல் பகுதியில் முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றபோது பேருந்தின் பக்க வாட்டில் மோதி கீழே விழுந்துள்ளனா். இதில், படுகாயமடைந்த அருண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த ராஜராஜன் மீட்கப்பட்டு சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். சீா்காழி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று அருண் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








