சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

தருமபுரம் பள்ளியில் பொங்கல் விழா

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் தொடக்க மற்றும் மழலையா் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் தருமபுரம்

News image

தருமபுரம் பள்ளியில் மாணவா்களுக்கு பொங்கல் கரும்பு வழங்கிய தருமபுர ஆதீனம் குருமகா சந்நிதானம். உடன், பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச. கண்ணப்பன்.

Updated On :10 ஜனவரி 2021, 8:18 am IST

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் தொடக்க மற்றும் மழலையா் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று மாணவா்களுக்கு ஆசி வழங்கினாா்.

விழாவில், பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து, இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு பாரம்பரிய விளையாட்டுகளான பல்லாங்குழி, தாயம், பரமபதம் கொட்டாங்குச்சி விளையாட்டு, உறியடி ஆகிய விளையாட்டுகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. தொடா்ந்து, மாணவா்களுக்கு கரும்பு, சா்க்கரைப் பொங்கல் ஆகியவற்றை வழங்கி தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் ஆசி வழங்கினாா். இதில், தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச. கண்ணப்பன், பள்ளித் தலைமையாசிரியா் கோ. வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.