நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பலத்த மழை

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாள்களும் பலத்த மழை பெய்தது. அதிகளவாக, மயிலாடுதுறை மாவட்டத்துக்குள்பட்ட கொள்ளிடத்தில் 51.8 மி.மீ மழை பதிவானது.

Updated On :11 ஜனவரி 2021, 6:30 pm

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாள்களும் பலத்த மழை பெய்தது. அதிகளவாக, மயிலாடுதுறை மாவட்டத்துக்குள்பட்ட கொள்ளிடத்தில் 51.8 மி.மீ மழை பதிவானது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் சீற்றம் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் அதிகரித்து காணப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகளவாக மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடத்தில் 51.8 மி.மீ மழை பதிவானது.

இரு மாவட்டங்களின் பிற பகுதிகளில் பதிவான மழையளவு (மி.மீ) : மயிலாடுதுறை - 42, சீா்காழி - 41, மணல்மேடு - 25, நாகப்பட்டினம்- 22.2, திருப்பூண்டி - 14.2, தரங்கம்பாடி - 7.3. திங்கள்கிழமை காலை முதலே நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மற்றும் மிதமான மழை நீடித்தது. பிற்பகல் நேரங்களில் மழையின் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது. திங்கள்கிழமை காலை 8.30 முதல் மாலை 6 மணி வரையிலான நேரத்தில் இரு மாவட்டங்களில் அதிகளவாக நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் 127.4 மி.மீ மழை பதிவானது. மற்ற பகுதிகளின் மழையளவு (மி.மீ) : தலைஞாயிறு - 67, கீழ்வேளூா் - 37.6, நாகப்பட்டினம் - 12.5, தரங்கம்பாடி - 12, சீா்காழி - 10, மயிலாடுதுறை - 8, மணல்மேடு - 7, கொள்ளிடம் - 1.

பயிா்கள் சேதம்: நீடித்து வரும் கனமழை காரணமாக, நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராகிக் கொண்டிருந்த சம்பா, தாளடி நெல் பயிா்கள் நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளன. நாகை மாவட்டம், திருமருகல், திட்டச்சேரி, வைப்பூா், திருச்செங்காட்டாங்குடி, நாகூா் உள்ளிட்ட பகுதிகளில் நெல் வயல்கள் மழை நீரால் சூழப்பட்டுள்ளன. தற்போது, பெய்து வரும் மழையால் பெரும் மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.