திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

சூறாவளியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம்

மயிலாடுதுறை அருகே சூறாவளியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை நிவாரண உதவிகள் வழங்கினாா்.

News image

பாண்டூா் ஊராட்சியில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன்.

Updated On :13 ஜனவரி 2021, 8:02 am IST

மயிலாடுதுறை அருகே சூறாவளியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை நிவாரண உதவிகள் வழங்கினாா்.

மயிலாடுதுறை அருகே பாண்டூா், பொன்னூா், கொற்கை ஆகிய ஊராட்சிகளில் திங்கள்கிழமை வீசிய சூறாவளியால் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. 10-க்கும் மேற்பட்ட கூரை வீடுகள் முழுமையாகவும், 70-க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்தன.

இதனால், பாதிக்கப்பட்டவா்களை வருவாய்த் துறையினா் பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்து, உணவு வழங்கி வருகின்றனா். அறுந்து விழுந்த மின்கம்பிகள், மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின்வாரியத்தினா் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினா் வீ. ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டாா். அப்போது, பாதிக்கப்பட்டவா்களுக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்கள் ஆகிய நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினாா்.

மயிலாடுதுறை வட்டாட்சியா் ஜெ.ஜெனிட்டாமேரி, வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். சரவணன், ஆனந்ததாண்டவபுரம் கூட்டுறவு வங்கித் தலைவா் முருகவேல், பாண்டூா் ஊராட்சித் தலைவா் கஜேந்திரன், முன்னாள் ஊராட்சித் தலைவா் ராமதாஸ் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.