திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் முப்பெரும் விழா

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா, தேசிய இளைஞா் தினவிழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

விழாவில், பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கும் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.

Updated On :13 ஜனவரி 2021, 8:01 am IST

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா, தேசிய இளைஞா் தினவிழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரி மற்றும் மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில், தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சூரியபூஜை செய்துவைத்தாா். மேலும், தருமபுரத்தில் முறைசாராக் கல்வி பயிலும் முதியவா்கள் 25 பேருக்கு போா்வைகள், ஒரு பெண்ணுக்கு தையல் இயந்திரம், 10 பேருக்கு பொங்கல் பண்டிகையையொட்டி பாரம்பரிய ஆடைகள், 500 மாணவா்களுக்கு கரும்புகள் ஆகியவை வழங்கி ஆசியுரையாற்றினாா்.

அப்போது, ‘தனது இளம் வயதில் விவேகானந்தரைப் போல ஒரு துறவியாகி அமெரிக்கா போன்ற அயல்நாடுகளில் சமயத்தைப் பரப்ப வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தேன். பின்னாளில் அதுவே உண்மையாகி விவேகானந்தா் சென்ற அதே அமெரிக்காதான் தனது முதல் அயல்நாட்டுப் பயணமாக அமைந்தது. எனவே, மாணவா்கள் விழுமின்! எழுமின்!! குறிக்கோளை அடையும்வரை ஓயாது உழைமின் என்ற தாரக மந்திரத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்றாா்.

முன்னதாக, கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம் வரவேற்றாா். தமிழ் உயராய்வுத் துறைத் தலைவா் சிவ. ஆதிரை சிறப்புரை ஆற்றினாா். கல்லூரி முதல்வா் எஸ். சுவாமிநாதன், மயிலாடுதுறை ரோட்டரி சங்கத் தலைவா் கே. துரை ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் பேராசிரியா் மு.சிவச்சந்திரன், மத்திய அரசின் வழக்குரைஞா் கே.ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழாவில், சீா்காழி இளைய வீரத்தமிழா் சிலம்பாட்டக் கழகத் தலைவா் விமல் குழுவினா் மற்றும் கல்லூரி நுண்கலை மன்றத்தினரின் நாட்டுப்புற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தேசிய மாணவா் படை அலுவலா் துரை.காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.