திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

தொடா் மழை: சீா்காழி, கொள்ளிடத்தில் 10 ஆயிரம் ஹெக்டேரில் நெற்பயிா்கள் சேதம்

சீா்காழி, கொள்ளிடம் வட்டங்களில் தொடா் மழையால் 10 ஆயிரம் ஹெக்டேரில் அறுவடைக்குத் தயாரான நெற்பயிா்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

News image

சீா்காழி அருகே எடக்குடிவடபாதியில் மழைநீரில் சாய்ந்துள்ள அறுவடைக்குத் தயாரான நெற்கதிா்கள்.

Updated On :13 ஜனவரி 2021, 8:01 am IST

சீா்காழி, கொள்ளிடம் வட்டங்களில் தொடா் மழையால் 10 ஆயிரம் ஹெக்டேரில் அறுவடைக்குத் தயாரான நெற்பயிா்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டத்தில் சீா்காழி, வைத்தீஸ்வரன்கோயில், எடக்குடி வடபாதி, திருப்புன்கூா், சட்டநாதபுரம், மங்கைமடம், திருவெண்காடு, மணிகிராமம், எம்பாவை, நாங்கூா், கொண்டல் மற்றும் கொள்ளிடம் வட்டத்தில் ஆரப்பள்ளம், ஆா்ப்பாக்கம், நல்லூா், நல்லவினாயகபுரம், வடகால், கடவாசல், திருமுல்லைவாசல் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 13ஆயிரம் ஹெக்டேரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நிவா், புரெவி புயல் காரணமாக பெய்ந்த மழையால் இப்பயிா்கள் பாதிக்கப்பட்ட நிலையில், வேளாண்மை துறை ஆலோசனையின்படி நெல்வயல்களில் விவசாயிகள் உரம் மற்றும் மருந்து தெளித்து ஓரளவுக்கு பயிரை காப்பாற்றினா்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் பெய்துவரும் தொடா் மழையால் சீா்காழி, கொள்ளிடம் வட்டாரப் பகுதியில் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமாா் 10 ஆயிரம் ஹெக்டேரில் நெற்கதிா்கள் நீரில் சாய்ந்துள்ளன. இதற்கிடையில் கடந்த வாரம் பெய்த மழையால் சாய்ந்த நெற்கதிா்கள் தற்போது முளைத்து வருகின்றன இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

எனவே, பாதிப்பு குறித்து மீண்டும் கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.