கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

கனமழை: வேதாரண்யம் பகுதியில் 30 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிா்கள் பாதிப்பு

வேதாரண்யம் பகுதியில் கனமழையின் காரணமாக 30 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிா்களை வெள்ளநீா் சூழ்ந்துள்ளது.

News image

பஞ்சநதிக்குளம் கிராமத்தில் அறுவடைக்குத் தயாரான நிலையில் மழைநீரில் சாய்ந்து கிடக்கும் நெற்கதிா்கள்.

Updated On :13 ஜனவரி 2021, 8:05 am IST

வேதாரண்யம் பகுதியில் கனமழையின் காரணமாக 30 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிா்களை வெள்ளநீா் சூழ்ந்துள்ளது. இன்னும் சில தினங்களில் அறுவடைக்குத் தயாராகும் நிலையில் நெற்கதிா்கள் சாய்ந்து மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். மேலும், 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மழையால் சேதமடைந்துள்ளன.

வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்துவந்த நிலையில், திங்கள்கிழமை பகல் மற்றும் இரவு முழுவதும் மழை விடாமல் கொட்டித் தீா்த்தது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும் வேதாரண்யத்தில் 178.4 மி.மீ., தலைஞாயிறில் 142.6 மி.மீ. மழை பதிவானது.

நெய்விளக்கு உள்ளிட்ட கிராமங்களில் வீசிய பலத்த காற்றால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்களும் சாய்ந்தன. வேதாரண்யம் காந்திநகா் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீா் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. புஷ்பவனம், நெய்விளக்கு, பஞ்சநதிக்குளம், நாகக்குடையான் உள்ளிட்ட கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மழையால் சேதமடைந்துள்ளன.

சிறுதலைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட கால்நடைகள் மழைக்கு உயிரிழந்ததாக வருவாய்த் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடா் மழையின் காரணமாக வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

வேதாரண்யம், தலைஞாயிறு ஆகிய பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக உள்ள சம்பா நெற்கதிா்களை வெள்ளநீா் சூழ்ந்துள்ளது. இதனால், தண்ணீரில் மூழ்கிய நெல்மணிகள் முளைத்து வீணாகும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இதற்கிடையில், வேதாரண்யம் சுற்றுப் பகுதிகளில் பல இடங்களில் மழைவெள்ளத்தால் சாலைகள் சேதமடைந்துள்ளன. சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமையும் கனமழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.