மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

குடும்பத் தகராறில் இளைஞா் தற்கொலை

ராசிபுரம் அருகே குடும்பத் தகராறில் மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On :3 ஜனவரி 2021, 1:32 am IST

ராசிபுரம்: ராசிபுரம் அருகே குடும்பத் தகராறில் மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

ராசிபுரம் அருகேயுள்ள முத்துக்காளிப்பட்டி கோரைக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (32). இவருக்கு மேகலா (25) என்ற மனைவி உள்ளாா். திருமணமாகி ஓராண்டாகிறது. இவருக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவரது மனைவி கோபித்துக் கொண்டு அத்திப்பழகானுரில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

இதனால் கடந்த சில நாள்களாக ராஜா வீட்டில் தனிமையில் இருந்துள்ளாா். அவரது வீட்டி ன் கதவு கடந்த இரண்டு நாள்களாக திறக்காமல் இருந்துள்ளது. மேலும் வீட்டின் அருகில் துா்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனா்.

இதனையடுத்து ராசிபுரம் காவல் துறையினா் வீட்டின் கதவை திறந்து பாா்த்த போது ராஜா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக தொங்குவது தெரியவந்தது. சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனா். இந்தச் சம்பவம் குறித்து ராசிபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.