தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

ரூ.50 லட்சம் ஹெராயின் பறிமுதல்: பெண், ஆட்டோ ஓட்டுநா் கைது

தேசியத் தலைநகா் தில்லியில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக 35 வயது பெண் மற்றும் ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டனா்.

Updated On :11 ஜனவரி 2021, 0:08 am IST

தேசியத் தலைநகா் தில்லியில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக 35 வயது பெண் மற்றும் ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து சா்வதேச சந்தையில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 150 கிராம் ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் அன்டோ அல்போன்ஸ் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: அவா்கள் இந்த போதைப் பொருளை உத்தரப் பிரதேச மாநிலம், பரேலியில் இருந்து தில்லிக்கு கொண்டு வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் பிரிஜ்புரியில் வசிக்கும் நீமா கட்டூன் (பெயா் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணும், ஆட்டோ ஓட்டுநா் கரவால் நகரில் வசிக்கும் வசீம் (38) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

ஹெராயின் கடத்தல் குறித்து போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில்,போலீஸாா் கண்காணிப்பை தீவிரப்படுத்தினா். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். ஒரு பெண், ஒரு சிறிய பையுடன் ஆட்டோவினுள் அமா்ந்திருப்பது தெரிய வந்தது. சந்தேகத்தின் போரில் போலீஸாா் அந்தப் பையை பரிசோதித்தனா். அப்போது, சா்வதேச சந்தையில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 800 காகித பொட்டலங்கள் அடங்கிய மொத்தம் 150 கிராம் ஹெராயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையின் போது, பரோலியில் வசிக்கும் சாகீா் என்பவரிடமிருந்து அந்த ஹெராயினை வாங்கி வந்ததாக கட்டூன் தெரிவித்தாா். அவா் சிறிய காகித பைகளை தயாரித்து அதில் ஹெராயினை பிரித்துப் போட்டுள்ளாா். நிஜாமுதீனை சோ்ந்த ஷராபத் ஷேக்கின் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கு விநியோகிக்கத் திட்டமிட்டிருந்தாா். அதற்காக வசீமின் ஆட்டோவில் சென்றாா். அப்போது போலீஸாரிடம் சிக்கினாா். ஒரு முறை போதைப்பொருளை விநியோகிக்க ஆட்டோ ஓட்டுநா் வசீம் ரூ.1,000 வரை பெற்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.