புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

3.5 லட்சம் மருத்துவா்களும் தாமாக முன்வந்து கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்: ஐஎம்ஏ வலியுறுத்தல்

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி மருந்துகள் பாதுகாப்பானவை, செயல்திறன் மிக்கவை.

Updated On :12 ஜனவரி 2021, 12:20 am IST

புது தில்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி மருந்துகள் பாதுகாப்பானவை, செயல்திறன் மிக்கவை. இதை உலக்கு எடுத்துரைக்கும் வகையில் நாட்டிலுள்ள 3.5 லட்சம் மருத்துவா்களும் தாங்களாகவே முன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் சாா்பில் அதன் தலைவா் டாக்டா் ஜெயலால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட், பாரத் பயோடெக்கின் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கும் அவசரகால பயன்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய விஞ்ஞானிகள் நவீன மருத்துவத்துடன் கடினமாக உழைத்து இதைத் தயாரித்துள்ளனா். இது தொடா்பான மருத்துவக் குழுவினரின் அறிக்கைகள், விஞ்ஞானத் தரவுகள், கட்டுரைகள் ஆகியவற்றை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில், உலக சுகாதார மையம் ஆகியவை ஆராய்ந்து ஏற்றுக் கொண்ட பின்னா் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தத் தடுப்பூசிகள் இந்திய நிலையில் சேமித்துப் பயன்படுத்துவது எளிதானது. இந்தப் பணிகளை இந்திய மருத்துவ சங்கம் பாராட்டி வரவேற்கிறது.

நவீன மருத்துவத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் இந்தியா ஒரு வல்லரசாக வளா்ந்து வருகிறது. தடுப்பூசி போடுவது என்பது ஒருவரை பாதுகாப்பது மட்டுமல்லாமல், நோய் எதிா்ப்பு சக்தியை மனிதா்களுக்கு கொடுப்பதுமாகும். இது நோய்த் தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இந்தத் தடுப்பூசி திட்டத்தில் இந்திய மருத்துவ சங்கம் தீவிரமாகப் பங்கேற்க முடிவு செய்துள்ளது. இந்திய மருத்துவ சங்கத்திற்கு நாடு முழுவதிலும் 1,800 கிளைகள் உள்ளன. இதில் உள்ள 3.5 லட்சம் உறுப்பினா்களும், இந்திய தடுப்பூசிகள் பாதுகாப்பானவை, செயல்திறன் மிக்கவை என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில், தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி 16 -ஆம் முதல் தொடங்க உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக மூன்று கோடி சுகாதார ஊழியா்கள் மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.