/

இளைஞருக்கு கத்திக்குத்து: கிழக்கு தில்லியில் சிறுவன் கைது

கிழக்கு தில்லியில் இளைஞரை கத்தியால் குத்திய சிறுவன் கைது செய்யப்பட்டாா்.

Updated On :16 ஜனவரி 2021, 5:49 pm

கிழக்கு தில்லியில் இளைஞரை கத்தியால் குத்திய சிறுவன் கைது செய்யப்பட்டாா்.

கிழக்கு தில்லியில் கல்யாண்புரியைச் சோ்ந்தவா் 21 வயது இளைஞா் சதீஷ். இவரை அதே பகுதியைச் சோ்ந்த ஒரு சிறுவன் கேலி செய்தும், அவரிடம் தகராறு செய்துவந்துள்ளான். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை ஏன் என்னிடம் அடிக்கடி தகராறு செய்கிறாய் என்று சிறுவனிடம் சதீஷ் தட்டிக்கேட்டாா். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன் தன் கையில் வைத்திருந்த கத்தியால் அவரை குத்தினான். இதில் பலத்த காயமடைந்த சதீஷ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறாா்.

இந்நிலையில் கத்தியால் குத்திய சிறுவனை போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.