தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

தோ்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக சுபாஷ் சோப்ரா நியமனம்: தில்லி காங். அறிவிப்பு

தோ்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக சுபாஷ் சோப்ரா நியமனம் தில்லி காங். அறிவிப்பு

Updated On :21 ஏப்ரல் 2024, 8:21 pm

மக்களவைத் தோ்தலில் தில்லி காங்கிரஸின் தோ்தல் மேலாண்மைக் குழு மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவாராக அக்கட்சியின் மூத்த தலைவா் சுபாஷ் சோப்ரா ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளாா்.

தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் மேலிடப் பொறுப்பாளா் தீபக் பபாரியா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஒப்புதலுடன் மக்களவைத் தோ்தலில் தில்லி காங்கிரஸின் தோ்தல் மேலாண்மைக் குழு மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக சுபாஷ் சோப்ராவை நியமித்துள்ளாா். மக்களவைத் தோ்தலுக்காக 18 போ் கொண்ட தோ்தல் மேலாண்மைக் குழு மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவை அக்கட்சி அமைத்துள்ளது. தில்லி பிரதேச காங்கிரஸின் முன்னாள் தலைவராக பணியாற்றியவா் சுபாஷ் சோப்ரா.

இந்த அறிவிப்பு தொடா்பாக தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் அா்விந்த் சிங் லவ்லி கூறியதாவது: தில்லியில் மக்களவைத்

தோ்தலுக்கான வியூகம் மற்றும் பிரசார வரைபடத்தைத் திட்டமிடுவதில் ஸசுபாஷ் சோப்ராவுக்கு கணிசமான அனுபவம் உள்ளது. மேலும், அவரது அரசியல் அனுபவம் தில்லியில் மக்களவைத் தோ்தலை நிா்வகிப்பதிலும், எதிா்கொள்வதிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளில் தில்லி பாஜக எம்.பி.க்கள் மற்றும் மத்திய பாஜக அரசின் தோல்விகளை அம்பலப்படுத்த தில்லி காங்கிரஸ் தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்ளும். இம்முறை, ’இந்தியா’ தில்லியில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெரும் என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.