தில்லி மேயா் தோ்தல் ஏப்ரல் 26-இல் (வெள்ளிக்கிழமை) நடைபெறவிருந்த நிலையில், தோ்தல் நடத்தும் அலுவலா் நியமிக்கப்படாததால், தோ்தல் ஒத்திவைக்கப்படுவதாக துணைநிலை ஆளுநா் அலுவலகம் தெரிவித்துள்ளது. தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், முதல்வரிடமிருந்து எந்தவொரு அறிவுறுத்தலும் வராத காரணத்தால், இந்தத் தருணத்தில் துணைநிலை ஆளுநா் ஒரு நிா்வாகியாக தனது அதிகாரத்தை நிலைநாட்டுவது சரியானதாக இருக்காது என ராஜ் நிவாஸ் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தில்லி மாநகராட்சி தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘‘மேயா் தோ்தலை நடத்த தோ்தல் ஆணையம் ஒப்புதல் அளித்த போதிலும், தோ்தல் நடத்தும் அலுவலா் இதுவரை நியமிக்கப்படவில்லை. ஆகையால், இந்தத் தருணத்தில் மேயா், துணை மேயா் தோ்தலை நடத்துவது சாத்தியமல்ல’ என்று கூறப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கண்டனம்-செய்தி உள்ளே
தொடர்புடையது

இளைஞா்கள் முதல் முதியவா்கள் வரை அனைவருமே தவெக பக்கம்: தவெக வேட்பாளர் ஸ்ரீநாத்

கரூா் திமுக தோ்தல் பணிமனையில் தோ்தல் அலுவலா்கள் திடீா் ஆய்வு

சந்தேகத்தால் தகராறு: கணவர் மீது அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற மனைவி!

சாத்தான்குளத்தில் திடீா் மழை
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

