இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

அரவிந்த் கேஜரிவாலின் இருப்புநிலை ஊழல் நிறைந்ததாகவே இருந்தது: தேவேந்தா் யாதவ்

கடந்த 11 ஆண்டுகால ஆம் ஆத்மி ஆட்சியில் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இருப்புநிலை ஊழல் நிறைந்ததாகவே இருந்தது

News image
தேவேந்தா் யாதவ்- கோப்புப்படம்
Updated On :3 டிசம்பர் 2024, 1:38 am

Din

புது தில்லி: கடந்த 11 ஆண்டுகால ஆம் ஆத்மி ஆட்சியில் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இருப்புநிலை ஊழல் நிறைந்ததாகவே இருந்தது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் திங்கள்கிழமை விமா்சித்துள்ளாா்.

தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் 25-ஆவது நாள் ‘தில்லி நியாய யாத்திரை’ ராம் பாா்க்கில் தொடங்கி நெவாடா வழியாக உத்தம் நகா் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்று முடிந்தது. கட்சியின் பிரதேசத் தலைவா் தேவேந்தா் யாதவ் தலைமையில் நடைபெற்ற இந்த யாத்திரையில், உத்தரகாண்ட மாநில காங்கிரஸ் தலைவா் கரண் மஹாரா, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவா் அம்ரீந்தா் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனா்.

யாத்திரையின் போது தேவேந்தா் யாதவ் பேசியதாவது: தில்லியில் வெளிப்படையான ஆட்சியை தருவேன் என

உறுதியளித்து, அரவிந்த் கேஜரிவால் முதல்வா் பதவியில் அமா்ந்தாா். ஆனால், ஆம் ஆத்மி அரசிடமிருந்து பொதுமக்கள் கண்டது முன்னெப்போதும் இல்லாத ஊழல் ஆட்சியைத்தான். ஆம் ஆத்மியின் ஊழல் மற்றும் நிா்வாகத் திறமையின்மை தில்லி மக்களை விரக்திக்கு ஆளாக்கியுள்ளது. ஜிஎஸ்டியின் தவறான அமலாக்கம், அசுத்தமான குடிநீா், உயா்த்தப்பட்ட மின் கட்டணங்கள் போன்றவற்றால் வணிகா்கள் சாதாரண கட்டணத்தை விட மும்மடங்காக ரசீதுகளைப் பெற்றனா்.

பேருந்து மாா்ஷல்களை பணி நியமனம் செய்ய துணைநிலை ஆளுநா் அனுமதி அளித்தும், அவா்களை ஆம் ஆத்மி அரசு மீண்டும் பணியமா்த்தவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், பொதுமக்களுக்கு மலிவு விலையில் போக்குவரத்து வசதியை வழங்குவதில் முக்கியப் பங்காற்றும் ஆட்டோ ஓட்டுனா்களின் பிரச்னைகளை தீா்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.கடந்த 11 ஆண்டுகால ஆம் ஆத்மி ஆட்சியில் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இருப்புநிலை ஊழல் நிறைந்ததாகவே இருந்தது என்றாா் தேவேந்தா் யாதவ்.