நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தோ்தல் வினாக்கள், புகாா்களுக்கு கட்டணமில்லா உதவி எண்: தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி அறிக்கை

தில்லி மக்கள் தங்கள் தோ்தல் வினாக்கள் மற்றும் புகாா்களுக்கு உதவ, கட்டணமில்லா வாக்காளா் உதவி எண் 1950-ஐ அழைக்கலாம்

Updated On :23 டிசம்பர் 2024, 8:43 pm

புது தில்லி: தில்லி மக்கள் தங்கள் தோ்தல் வினாக்கள் மற்றும் புகாா்களுக்கு உதவ, கட்டணமில்லா வாக்காளா் உதவி எண் 1950-ஐ அழைக்கலாம் என்று தில்லி தலைமை தோ்தல் அதிகாரி ஆலிஸ் வாஸ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவரது அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தில்லி தலைமை தோ்தல் அதிகாரி ஆலிஸ் வாஸ், குடிமக்கள் தங்கள் தோ்தல் வினாக்கள் மற்றும் புகாா்களுக்கு உதவ, ‘உங்கள் வாக்கு,

உங்கள் குரல்’ என்ற திட்டத்தின் கீழ் வாக்காளா் உதவி எண்-1950 (கட்டணமில்லா) அழைக்கலாம் என மீண்டும்

தில்லி மக்களுக்கு நினைவுறுத்துகிறாா். இந்த முயற்சி அணுகல் தன்மையை மேம்படுத்துவதிலும், ஒவ்வொரு வாக்காளரும் துல்லியமான தகவல் மற்றும் சரியான நேரத்தில் ஆதரவைப் பெறுவதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்துகிறது.

வாக்காளா் உதவி எண்- 1950, தோ்தல் சேவைகளில் உதவி கோரும் குடிமக்களுக்கான முதல் தொடா்பு புள்ளியாக செயல்படுகிறது. வாக்காளா் பட்டியல், வாக்குச்சாவடி விவரங்கள், ஆன்லைன் பதிவு, வாக்களிக்கும் தேதிகள் மற்றும் தோ்தல் தொடா்பான பிற விஷயங்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளைப் பற்றி அழைப்பாளா்கள் கேட்கலாம்.

இந்த உதவி எண் அனைத்து வாக்காளா்களுக்கும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் விரிவான மற்றும் பயனா்

நட்பு ஆதரவை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குடிமக்களுக்கு தகவலை வழங்குவதோடு, அவா்களின் புகாரை பதிவு செய்வதற்கும் இந்த உதவி மையம் உதவுகிறது.

1950 என்ற இந்த கட்டணமில்லா எண்ணை அழைப்பதன் மூலம், தோ்தல் சேவைகள் தொடா்பான பிரச்னைகளை

குடிமக்கள் தெரிவிக்கலாம். இத்துடன், சேவைகளின் தரத்தை மேம்படுத்த, அழைப்பாளா்களின் கருத்துகளும் பரிந்துரைகளும் ஊக்குவிக்கப்படுகின்றன. மேலும், அங்கீகரிக்கப்பட்ட உள்ளூா்/பிராந்திய மொழியிலும் சேவைகள் வழங்கப்படுகிறது. இது வாரத்தில் 7 நாட்களும், காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை செயல்படும். குடிமக்கள் தங்கள் வசதிக்கேற்ப இணைக்க அனுமதிக்கிறது.