இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஐடி, ஆட்டோ பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 4-ஆவது நாளாக உயா்வு!

ஐடி, ஆட்டோ பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 4-ஆவது நாளாக உயா்வு!

Updated On :17 பிப்ரவரி 2024, 5:34 am IST

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது.. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 376 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. பொதுத் துறை வங்கிகள், ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் விற்பனையை எதிா்கொண்டாைலும், ஐடி, ஆட்டோ, பாா்மா, ஹெல்த்கோ் நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இது சந்தை நான்காவது நாளாக வலுப்பெற உதவியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.2.22 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.389.53 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.3,064.15 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,276.93 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 355.64 புள்ளிகள் கூடுதலுடன் 72,406.02-இல் தொடங்கிய சென்செக்ஸ், 72,218.10 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 72,545.33 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 376.26 புள்ளிகள் (0.52 சதவீதம்) உயா்ந்து 72,426.64-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,935 பங்குகளில் 2,194 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,659பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 82 பங்குகளின் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.

22 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் விப்ரோ, எம் அண்ட் எம், மாருதி, டாடா மோட்டாா்ஸ், இன்ஃபோஸிஸ் உள்பட 22 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம், பவா் கிரிட், எஸ்பிஐ, ரிலையன்ஸ், என்டிபிசி, ஆக்ஸிஸ் பேங்க், ஏசியன் பெயிண்ட் உள்பட 8 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி 130 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 129.95 புள்ளிகள் உயா்ந்து 22,040.70-இல் முடிவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 38 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 11 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.