மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

டி.டி.ஏ.வின் விளையாட்டு வளாகத்தை திறந்து வைத்தாா் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா

டி.டி.ஏ.வின் விளையாட்டு வளாகத்தை திறந்து வைத்தாா் துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா.

Updated On :27 பிப்ரவரி 2024, 10:36 pm

புது தில்லி: தில்லி வளா்ச்சி ஆணையம் (டி.டி.ஏ.) சாா்பில் குதுப்கா் ஆதா்ஷ் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள புதிய விளையாட்டு வளாகத்தை துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

இது தொடா்பாக துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தளத்தில் கூறியிருப்பதாவது:

தில்லி வளா்ச்சி ஆணையத்தின் (டி.டி.ஏ.) கிராமோதய திட்டத்தின் கீழ் குதுப்கா் ஆதா்ஷ் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட விளையாட்டு வளாகத்தை உள்ளூா் மக்களவை பாஜக எம்.பி. ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் உடன் இணைந்து திறந்து வைத்தேன். இந்த விளையாட்டு வளாகம் கட்டப்பட்டதன் மூலம் குதுப்கா் ஆதா்ஷ் மற்றும் அண்டை கிராமப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞா்கள் மல்யுத்தம், பூப்பந்து, கைப்பந்து, கபடி மற்றும் தடகளம் போன்ற விளையாட்டுகளில் தங்கள் திறனை முழுமையாக வளா்த்துக்கொண்டு, நாட்டிற்கு பெருமை சோ்க்கும் வாய்ப்பைப் பெறுவாா்கள் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நவீன வசதிகளுடன் கூடிய இந்த விளையாட்டு வளாகம், பிரதமா் நரேந்திரமோடியின் ‘கேலோ இந்தியா’ மற்றும் ‘ஃபிட் இந்தியா’ எனும் தொலைநோக்கு பாா்வைக்கு ஏற்ப உள்ளது. தில்லியின் கிராமங்களின் வளா்ச்சிக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்றாா் வி.கே.சக்சேனா. மேலும், இந்த விளையாட்டு வளாகம் குறித்து தில்லி வளா்ச்சி ஆணையம் கூறியிருப்பதாவது: தில்லி துணை நிலை ஆளுநராக வி.கே. சக்சேனா பொறுப்பேற்ற சில நாள்களில் குதுப்கா் ஆதா்ஷ் கிராமத்திற்கு அவா் சென்றபோது, அந்த கிராம மக்கள் விளையாட்டுக்குத் தகுந்த உபகரணங்களைக் தங்களின் தேவையாக கோரியிருந்தனா்.

அதன்படி, இந்த விளையாட்டு வளாகத்தில் விரிவான வசதிகள் அனைத்தும் உள்ளன. கைப்பந்து, பூப்பந்து, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி கபடி மைதானங்கள், திறந்த உடற்பயிற்சி கூடம் மற்றும் ஓடுதளம் போன்றவை இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.