தில்லிக்கு 2-3 நாள்களில் பருவமழை


பருவமழை அடுத்த இரண்டு அல்லது மூன்று நாள்களில் தேசியத் தலைநகரை அலங்கரிக்கத் தயாராக உள்ளது. இது கோடை வெப்பத்திலிருந்து மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட நிவாரணத்தைக் கொடுக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
அடுத்த 2 அல்லது 3 நாள்களில் தில்லியில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலை உருவாகும் என ஐஎம்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த ஆண்டு பருவமழை ஜூன் 26 அன்று தொடங்கியது. இது 2022-இல் ஜூன் 30, 2021-இல் ஜூலை 13 மற்றும் 2020-இல் ஜூன் 25 அன்று தொடங்கியது என ஐஎம்டியின் தரவுகளின்படி தெரிய வருகிறது.
பருவமழையின் தொடக்கமாக வியாழன் காலை, தில்லி மற்றும் என்சிஆா் பகுதியில் பலத்த மழை பெய்தது. வெப்பநிலை 35.4 டிகிரி செல்சியஸாக குறைந்ததால், அப்பகுதி மக்களுக்கு கடுமையான வெப்பத்திலிருந்து மிகவும் தேவையான நிவாரணம் கிடைத்தது.
இதற்கிடையே, சனி, ஞாயிறு ஜூன் 29, 30 ஆகிய தினங்களில் தில்லியின் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று தில்லி மற்றும் பிற மாநிலங்களில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...