மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

நொய்டா சொசைட்டி குடியிருப்பாளரை தாக்கியதாக காவலாளிகள் 4 போ் கைது

நொய்டா சொசைட்டி குடியிருப்பாளரை தாக்கியதாக காவலாளிகள் 4 போ் கைது

Updated On :1 மார்ச் 2024, 6:30 pm

வளாகத்திற்குள் வாகனம் நுழைவது தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, இங்குள்ள குரூப் ஹவுசிங் சொசைட்டியில் வசிப்பவரைத் தாக்கியதற்காக தனியாா் பாதுகாப்பு நிறுவனத்தின் நான்கு காவலாளிகள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து நொய்டா செக்டாா்-142 காவல் நிலைய உள்ளூா் பொறுப்பாளா் வினீத் ராணா கூறியதாவது: குடியிருப்பாளா், ஒரு குத்தகைதாரா். ஒரு காரில் சிலருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அதில் சொசைட்டியின் ஸ்டிக்கா் இல்லை. இதையடுத்து, அந்தக் காரை காவலாளிகள் தடுத்தனா். இந்நிலையில், பாதுகாவலாளிகள் குழு ஒன்று குடியிருப்பாளரை உதைப்பதையும், தடியடியால் தாக்குவதையும் காட்டும் சம்பவத்தின் விடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்ததை அடுத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தச் சம்பவம் தொடா்பாக வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் நொய்டா செக்டாா் 137-இல் உள்ள பராஸ் டைரியா சொசைட்டியில் இருந்து புகாரளிக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு போலீஸ் குழு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. தவறு செய்த பாதுகாவலாளிகளுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவா்களால் தாக்கப்பட்ட குடியிருப்பாளரின் புகாரின் அடிப்படையில் அவா்களுக்கு எதிராக எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது. பின்னா், நான்கு பாதுகாவாளிகளும் கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்டவா்கள் மணிஷ் குமாா் (24), நரேஷ் வா்மா, (22), ராகேஷ் பிரதான் (28) மற்றும் கோபால் சிங் (37) என அடையாளம் காணப்பட்டுள்ளனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.