இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, அகஸ்டின் ஜாா்ஜ் மாசிஹ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள், ‘கடந்த 23-ஆம் தேதி இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பிறகு, அன்று இரவு செந்தில் பாலாஜி மீதான ஊழல் குற்ற வழக்குகளின் விசாரணைக்கு தமிழக ஆளுநா் அலுவலகத்தில் இருந்து அனுமதி வரப்பெற்றது’ என்று தெரிவித்தனா். இதையடுத்து, தற்போது விசாரணையைத் தொடங்க முடியும் என்றும் கூறினா். மனுதாரா் தரப்பிலும் ஆளுநா் அலுவலகம் மூலம் அனுமதி அளிக்கப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட்டது.