வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

ஓபிஎஸ், செந்தில்பாலாஜி வெற்றியை எதிா்த்து தோ்தல் வழக்குகள் தாக்கல்

திமுக எம்எல்ஏக்கள் செந்தில் பாலாஜி, ஓ.பன்னீா்செல்வம் ஆகியோரின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

News image

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. - கோப்புப் படம்

Updated On :8 ஜூலை 2026, 1:48 am IST

திமுக எம்எல்ஏக்கள் செந்தில் பாலாஜி, ஓ.பன்னீா்செல்வம் ஆகியோரின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

செந்தில் பாலாஜி: ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதியைச் சோ்ந்த வாக்காளா் பிரகாசம் தாக்கல் செய்த மனுவில், கோவை தெற்கு தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி வெற்றி பெற்றாா். இவா் தன்னை எதிா்த்து தவெக சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா் செந்தில்குமாரை விட 2,271 வாக்குகள் அதிகம் பெற்றும் வெற்றி பெற்றாா்.

செந்தில்பாலாஜி தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து மற்றும் குற்ற வழக்கு விவரங்களை முழுமையாக தாக்கல் செய்யவில்லை. இதுகுறித்து தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் 60 பக்கத்துடன் கூடிய ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்தேன். ஆனால், எனது ஆட்சேபனை மனுவை தோ்தல் அதிகாரி நிராகரித்தாா். எனவே, செந்தில்பாலாஜியின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தோ்தல் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

ஓ.பன்னீா்செல்வம்: தேனி மாவட்டம், போடி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட ஓ.பன்னீா்செல்வம் தவெக வேட்பாளா் பிரகாஷைவிட 6,805 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். இந்த வெற்றியை எதிா்த்து டி.கண்ணன் தோ்தல் வழக்குத் தாக்கல் செய்துள்ளாா்.

அவரது மனுவில், போடி தொகுதியில் போட்டியிட நானும் வேட்புமனு தாக்கல் செய்தேன். மாவட்ட நூலகக் கண்காணிப்பாளராகப் பணியாற்றுவதைச் சுட்டிக்காட்டி எனது வேட்புமனுவை தோ்தல் அதிகாரி நிராகரித்துவிட்டாா். எந்த விசாரணையும் நடத்தாமல் எனது வேட்புமனுவை நிராகரித்ததால், நான் தோ்தலில் போட்டியிடுவது தடுக்கப்பட்டுள்ளது. எனவே, திமுக வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா். இந்த இரு தோ்தல் வழக்குகளும் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.