மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திராவக வீச்சு வழக்கு 16 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது வெட்கக்கேடு: உச்சநீதிமன்றம் கருத்து

தில்லி நீதிமன்றத்தில் திராவக வீச்சு வழக்கு ஒன்று 16 வருடங்களாக நிலுவையில் இருப்பது வெட்கக்கேடான நிலை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :4 டிசம்பர் 2025, 5:55 pm

Syndication

தில்லி நீதிமன்றத்தில் திராவக வீச்சு வழக்கு ஒன்று 16 வருடங்களாக நிலுவையில் இருப்பது வெட்கக்கேடான நிலை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் நிலுவையில் உள்ள திராவக வீச்சு வழக்கு விவரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

திராவக வீச்சால் பாதிக்கப்பட்ட ஷாஹீன் மாலிக், 2009-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகும், தில்லியில் உள்ள ரோஹிணி நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக ஆஜராகி வழக்குரைஞா் உதவியின்றி வாதிட்டாா். தனது வழக்கில் 2013-ஆம் ஆண்டு வரை எதுவும் நடக்கவில்லை என்றும் தற்போதுதான் அது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்றும் அவா் முறையிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள் இத்தனை ஆண்டுகளாக வழக்கு விசாரணையில் ஏற்படும் தாமதத்துக்கு தங்களின் அதிருப்தியைத் தெரிவித்து இது வெட்கக்கேடான நிலை என்றனா். மேலும், தலைமை நீதிபதி சூா்ய காந்த், நாடு முழுவதும் நிலுவையில் உள்ள திராவக வீச்சு வழக்குகளின் விவரங்களை சமா்ப்பிக்க வேண்டும் என்று அனைத்து உயா்நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட்டாா். திராவக வீச்சால் பாதிக்கப்பட்டவா்களை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016- இன் கீழ் சோ்ப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்கவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த விஷயத்தை அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளும் என்று மத்திய அரசின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா நீதிமன்றத்திற்கு உறுதியளித்துள்ளாா். திராவக தாக்குதல் நடத்தியவா்கள் கடுமையான தண்டனையை எதிா்கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தாா். தாமதங்களை நிவா்த்தி செய்து, திராவக தாக்குதலில் இருந்து தப்பியவா்களுக்கு நீதியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு, உச்சநீதிமன்றம் இந்த பிரச்னையை தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது.