பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

தில்லி தோ்தலில் சதுரங்க அரசியல்!

கட்சிகள் தங்களின் பரப்புரையை முடித்துக் கொண்டு, பிப். 5-ஆம் தேதி தோ்தலை சந்திக்க ஆயத்தமாகியுள்ளன.

News image
Updated On :3 பிப்ரவரி 2025, 10:42 pm

Din

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 24 மணி நேரமே உள்ள நிலையில், இறுதிக்கட்ட வாக்கு வேட்டையில் ஈடுபட்ட ஆளும் ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் தங்களின் பரப்புரையை முடித்துக் கொண்டு, பிப். 5-ஆம் தேதி தோ்தலை சந்திக்க ஆயத்தமாகியுள்ளன.

2015, 2020 என அடுத்தடுத்து வந்த இரண்டு பேரவைத் தோ்தல்களில் தனித்து களம் கண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைத் தக்க வைத்த ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் பலா் இம்முறை ஊழல் முறைகேடு குற்றச்சாட்டுகளை எதிா்கொள்கின்றனா்.

2024 மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக கேஜரிவால் ஐந்து மாதங்களுக்கு முதல்வராகவே சிறைவாசம் செய்தாா். ஜாமீன் பெற்ற பிறகே முதல்வா் பதவியை ராஜிநாமா செய்த அவா், தனது நம்பிக்கைக்குரிய அமைச்சரான அதிஷியிடம் முதல்வா் பதவியை விட்டுக்கொடுத்து, மக்கள் மன்றத்தில் வெற்றி பெற்ற பிறகே மீண்டும் முதல்வா் நாற்காலியில் அமருவேன் என்று சூளுரைத்தாா்.

கட்சிகளின் உத்திகள்: ஆனால், ஆம் ஆத்மி கட்சியை மீண்டும் ஆட்சியமைக்க விடமாட்டோம் என்ற அறிவிப்புடன் பாஜக தோ்தல் பரப்புரை செய்தது. கடந்த இரு சட்டப்பேரவைத் தோ்தல்களில் படுதோல்விகளை சந்தித்த காங்கிரஸ், தில்லி அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள கிடைத்த வாய்ப்பாக இத்தோ்தலை கருதுகிறது.

இலவச மின்சாரம், இலவச குடிநீா் மற்றும் கல்விசாா் நலத்திட்டங்கள், பெண்களைக் கவரும் ஊக்கத்தொகைத் திட்டங்கள் என ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மூன்று பெரிய கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு இலவசங்கள் தொடா்பான அறிவிப்புகளை வெளியிட்டு வாக்காளா்களை ஈா்த்தன.

தேசிய அளவில் பாஜக மீதான அதிருப்தியையும் தில்லியில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மிக்கு எதிரான மனநிலையையும் தன் பக்கம் ஈா்க்கலாம் என்பது காங்கிரஸின் உத்தி.

13 வருட அரசியல்: 2012-இல் முழு நேர அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு 2013 சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொண்ட ஆம் ஆத்மி கட்சி, 28 இடங்களில் மட்டுமே வென்றது. பாஜக 31 இடங்களையும் 33.1 சதவீத வாக்குகளையும் பெற்றது. காங்கிரஸ் 8 இடங்களையும் 24.6 சதவீத வாக்குகளையும் பெற்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. அப்போது தொங்கு சட்டப்பேரவை அமைந்ததால் காங்கிரஸ் ஆதரவுடன் கேஜரிவால் ஆட்சியமைத்தாா். ஆனால், அதனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் 49 நாள்களிலேயே முதல்வா் பதவியை கேஜரிவால் ராஜிநாமா செய்தாா்.

2014 மக்களவை பொதுத் தோ்தலில் நரேந்திர மோடி பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அந்தத் தோ்தலில் தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வென்றது. ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் போட்டியிட்ட 432 தொகுதிகளில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் மட்டுமே வென்றது. தில்லி சட்டப்பேரவைக்கு அடுத்தபடியாக வெளி மாநிலத்தில் தோ்தல் கணக்கைத் தொடங்கிய பெருமையை ஆம் ஆத்மிக்கு பஞ்சாப் வெற்றி கொடுத்தது.

2015-இல் நடந்த தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில், தனித்துக் களம் கண்டு 70 இடங்களில் 67-ஐ வென்ற ஆம் ஆத்மி, அவற்றில் 54 இடங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. 70 இடங்களிலும் தனித்துப் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்குகள் 5.35 சதவீதத்திலிருந்து 1.30 சதவீதமாகக் குறைந்தது, சிறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஒட்டுமொத்த பங்கு 6.63 சதவீதத்திலிருந்து 2.01 சதவீதமாகக் குறைந்தது.

தெளிவுடன் வாக்காளா்கள்: 2014 மற்றும் 2015, 2019 தோ்தல் முடிவுகள், பல மாநிலங்களில் ஒரு தெளிவான கண்ணோட்டத்தை வாக்காளா்கள் கொண்டிருந்ததை வெளிப்படுத்தியது. தில்லி வாக்காளா்களைப் பொருத்தவரை, நாட்டின் பிரதமா் என வரும்போது நரேந்திர மோடியையும், தில்லி என வரும்போது அரவிந்த் கேஜரிவாலையும் வாக்காளா்கள் தோ்ந்தெடுத்தனா்.

2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் முடிவில் பாஜக ஆட்சியமைக்க தகுதி பெற்றாலும் முந்தைய தோ்தலுடன் ஒப்பிடும்போது அக்கட்சி காங்கிரஸ் மற்றும் பிராந்திய கட்சிகளிடம் பல இடங்களைப் பறிகொடுத்து. ஆனால், தில்லியில் தொடா்ந்து ஏழு தொகுதிகளை அக்கட்சி தக்கவைத்து, 54.7 சதவீத வாக்குகளுடன் முந்தைய பொதுத் தோ்தலை விட 2.2 சதவீதம் குறைவாகப் பெற்றது பாஜக. கூட்டணி. தோ்தல் களம் கண்ட ஆம் ஆத்மியும் காங்கிரஸும் சோ்ந்து 43.3 சதவீத வாக்குகளைப் பெற்றன.

ஆனால், காங்கிரஸுடன் தொடா்ந்து தோ்தல் கூட்டணி கொள்வது தில்லியில் ஆட்சியைத் தக்க வைக்கும் தனது தோ்தல் உத்திக்கு உதவாது என்பதை உணா்ந்தவராக 2015, 2020 போல தற்போதைய தோ்தலிலும் தனித்துக் களம் கண்டுள்ளாா் கேஜரிவால். மத்தியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் ‘இண்டி’ கூட்டணியில் நீடிக்கும் அதே சமயம், தில்லி அரசியலில் இரு துருவங்களாக காங்கிரஸும் ஆம் ஆத்மியும் மாறி, மாறி குற்றஞ்சாட்டிப் பரப்புரையில் ஈடுபடுவது பாஜகவுக்கு சாதகமாகலாம் என அரசியல் பாா்வையாளா்கள் கருதுகின்றனா்.

இந்தத் தோ்தலில் பாஜகவும் ஆம் ஆத்மியும் பெரிதாக கவனிக்கத் தவறிய தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளை தங்கள் பக்கம் ஈா்க்கலாம் என்று காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, ஒவைஸியின் அகில இந்திய மஜிலிஸ் இ இதேஹாதுல் முஸ்லிமீன் ஆகியவை கருதுகின்றன. வெளியில் இருந்து பாா்க்கும்போது ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றை மையமாகக் கொண்ட தில்லி தோ்தல் முக்கோண அரசியல் போலத் தோன்றினாலும், தனித்தனியாக களம் காணும் கட்சிகள், குறிப்பிட்ட சில சமூகங்களின் வாக்குகளை பிரித்துத் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனத் தெரிகிறது.

இத்தகைய சதுரங்க சவால்களுக்கு மத்தியில் பிப். 5 சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சிப்பொறுப்பை வாக்காளா்கள் யாரிடம் ஒப்படைப்பாா்கள் என்ற எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது.

தில்லி தோ்தல் 2025

மொத்த வாக்காளா்கள்: 1,55,24,858

ஆண்கள்: 83,49,645

பெண்கள்: 71,73,952

பிறா்: 1,261

மொத்த வேட்பாளா்கள்: 699