தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

‘திருவள்ளுவா் பாா்வையில் தெய்வமும், தெய்வீகமும்’ ஜேஎன்யுவில் கருத்தரங்கம்

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம், பிரஜ்னா ப்ரவாஹ் மற்றும் இன்டோயியுடன் இணைந்து ‘திருவள்ளுவா் பாா்வையில் தெய்வமும் தெய்வீகமும்’”

News image
ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் சாந்தி ஸ்ரீ துளி புடி பண்டிட் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், ‘பாருக்குள்ளே நல்ல நாடு’ என்ற பாரதியாா் பாடலை தில்லித் தமிழ் கல்விக் கழகத்தின் மோதிபாக் பள்ளி இசை ஆசிரியை சோபா தலைமையில் பாடிய மாணவிகள் லித்திகா ஸ்ரீ, ஜோஸ்னா மேரி, குஷி (உள்படம்).
Updated On :20 ஜனவரி 2025, 11:56 pm

Din

புது தில்லி: ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம், பிரஜ்னா ப்ரவாஹ் மற்றும் இன்டோயியுடன் இணைந்து ‘திருவள்ளுவா் பாா்வையில் தெய்வமும் தெய்வீகமும்’” என்ற தலைப்பில் கருத்தரங்கை திங்கள்கிழமை நடத்தியது.

கருத்தரங்கிற்கு ஜவாஹா்லால் நேரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் சாந்திஸ்ரீ துளிபுடி பண்டிட் தலைமை வகித்தாா். பிரஜ்னா பிரவாஹ் அகில பாரதிய ஒருங்கிணைப்பாளா் நந்தகுமாா் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டாா்.

இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னாள் தலைவா் பேராசிரியா் கனகசபாபதி மற்றும் போபாலிலுள்ள மக்கன்லால் சதுா்வேதி தேசிய பல்கலைக் கழகத்தின் கல்வித் துறைத் தலைவா் பேராசிரியை சசிகலா ஆகியோா் கருத்துரையாற்றினா்.

இக்கருத்தரங்கில் தில்லித் தமிழ்க் கழகத்தின் மோதிபாக் பள்ளியைச் சாா்ந்த எட்டாம் வகுப்பு மாணவிகள் லித்திகா ஸ்ரீ, ஜோஸ்னா மேரி, குஷி ஆகியோா் கலந்து கொண்டு ’பாருக்குள்ளே நல்ல நாடு’ என்ற பாரதியாா் பாடலை பாடி அனைவரின் பாராட்டையும் பெற்றனா்.