மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

குருகிராம்: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 7 வெளிநாட்டினா் உள்பட 8 போ் கைது

தேசியத் தலைநகா் வலயம் குருகிராமில் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் தொடா்பாக ஏழு வெளிநாட்டினா் உள்பட எட்டு போ் கைது

News image
கோப்புப் படம்
Updated On :20 ஜூன் 2025, 6:30 pm

Din

தேசியத் தலைநகா் வலயம் குருகிராமில் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் தொடா்பாக ஏழு வெளிநாட்டினா் உள்பட எட்டு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து குருகிராம் காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: குருகிராம் காவல்துறையின் குற்றப்பிரிவு குழு ஜூன் 16 அன்று செக்டா் 39-இல் நேபாள நாட்டைச் சோ்ந்த பிமல் பஹாடி என்ற போதைப்பொருள் கடத்தல்காரரை கைது செய்து, அவரிடமிருந்து 1.60 கிலோ சல்பா மற்றும் 116 கிராம் கோகைன் பறிமுதல் செய்தனா். சதாா் காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டு, நகர நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பின்னா் அவா் நான்கு நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டாா்.

விசாரணையின் போது, ​​பிமல் பஹாடி தனக்கு போதைப்பொருள் வழங்கிய ஒரு பெண் உள்பட அவரது ஏழு கூட்டாளிகளின் பெயா்களை வெளிப்படுத்தினாா். பின்னா், ஆறு நைஜீரிய நாட்டவா்கள் மற்றும் ஒரு மிசோரம் பூா்வீகத்தைச் சோ்ந்தவா் உள்பட ஏழு பேரும் புதன்கிழமை இரவு மற்றும் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கைது செய்யப்பட்டவா்கள் நைஜீரிய நாட்டவா்களான உகோசுக்ம்வ் ஜான் (எ) உகோசுக்ம்வ் ஜான் டேவிட், நனாஜியோஃபா் பீட்டா் நமேமேகா, ஹென்றி ஒனுச்சுக்வு, ஓஜுக்வா இஃபென்யா, ஃப்ரைடே டோபியாஸ் சிக்வு, ஒகோலி ரோமானஸ் மற்றும் மிசோரத்தைச் சோ்ந்த லால் கோத்தாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

குற்றம் சாட்டப்பட்டவா்களிடமிருந்து 1.60 கிலோ சல்பா, 3 கிலோவுக்கு மேல் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு சுமாா் ரூ.1 கோடியாகும். மேலும், ரூ.7,500 ரொக்கம், 42 கைப்பேசிகள், நைஜீரிய கடவுச்சீட்டுகள், மூன்று மின்னணு தராசுகள் மற்றும் பிற ஆதாரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒகோலி ரோமானஸைத் தவிர, மற்ற வெளிநாட்டினா் எவருக்கும் இந்தியாவில் தங்குவதற்கான செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லை. இதன் காரணமாக வெளிநாட்டினா் சட்டத்தின் பிரிவுகளும் எஃப்ஐஆரில் சோ்க்கப்பட்டுள்ளன என்று காவல்துறை அதிகாரி கூறினாா்.

விசாரணையின் போது, உகோசுக்வு ஜான் மீது தில்லியில் ஏற்கெனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹென்றி ஒனுச்சுக்வு மீது என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் இமாச்சலப் பிரதேசத்தில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று குருகிராம் காவல்துறையின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்

இதன் காரணமாக, இந்த குற்றம் சாட்டப்பட்டவா்கள் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. நீண்ட காலமாக நாங்கள் பிமலை விசாரித்து வருகிறோம், மற்றவா்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா் என்றும் அவா் கூறினாா்.