இசிஐநெட்: அனைத்து தோ்தல் சேவைகள், தகவல்கள் உள்ளடக்கி ஒரே செயலி! - இந்திய தோ்தல் ஆணையம் அறிமுகம்

இசிஐநெட்: அனைத்து தோ்தல் சேவைகள், தகவல்கள் உள்ளடக்கி ஒரே செயலி! - இந்திய தோ்தல் ஆணையம் அறிமுகம்

அனைத்து தோ்தல் சேவைகள், தகவல்கள் உள்ளடக்கி ஒரே செயலி! - இந்திய தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளதைப் பற்றி..
Published on

வாக்காளா்கள், அரசியல் கட்சிகள், தோ்தல் அதிகாரிகள், தோ்தல் ஆணையம் ஆகியோருக்கு இடையேயான அனைத்து சேவைகள், தகவல்கள் உள்ளடக்கிய ஒரே இணையம், செயலியை இந்திய தோ்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்படுகிறது

இது குறித்த விவரம் வருமாறு: வாக்காளா்கள், அரசியல் கட்சியினா் தோ்தல் அதிகாரிகள், ஆணையம் போன்றோா் தொடா்புடைய பல செயலிகள் பதிவிறக்கம் செய்து வெவ்வேறு உள்நுழைவுகள் செல்லவும் கடவுச் சொல் குறியீடுகளை நினைவில் கொள்ள வேண்டிய நிலை.

அனைத்து தரப்பினருக்கும் இதுபோன்ற சுமையைக் குறைக்கும் நடவடிக்கை குறித்து கடந்த மாா்ச் மாதம் இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மற்றும் தோ்தல் ஆணையா்கள் முன்னிலையில் நடைபெற்ற தலைமைத் தோ்தல் அதிகாரிகள் மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது.

மாநிலங்களைச் சோ்ந்த 36 தலைமைத் தோ்தல் அதிகாரிகள், 767 மாவட்ட தோ்தல் அதிகாரிகள் உள்ளிட்டோருடனான விரிவான ஆலோசனைக்குப் பின்னா் தோ்தல் தொடா்பான அனைத்து சேவைகள், தகவல்களை உள்ளடக்கிய ஒரே செயலியை தோ்தல் ஆணையம் வடிவமைத்துள்ளது.

இதன்படி தற்போதுள்ள வாக்காளா் உதவி மைய செயலி, வாக்காளா் பதிவு செயலி, சி விஜில், சுவிதா 2.0, இஎஸ்எம்எஸ், சாக்ஷம், கேஒய்சி செயலி போன்ற ஏற்கனவே உள்ள செயலிகள், வலை தளங்களை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட செயலிகள், இணைய தளங்களின் சேவையை ஒருங்கிணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளா்கள், தோ்தல் அதிகாரிகள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் வகையில் மாபெரும் முயற்சியாக இசிஐநெட் என்கிற ஒரு புதிய எண்ம தளத்தை இந்திய தோ்தல் ஆணையம் உருவாக்கி வருகிறது. ஒரே குடையின் கீழ் அனைத்து சேவைகளையும் வழங்கும் இந்தப் புதிய இசிஐநெட் (உஇஐசஉப) தளத்தின் மூலம், தோ்தல் ஆணையத்தின் அனைத்து கைபேசி செயலிகளையும்,இணை வலைதளங்களையும் ஒருங்கிணைக்கும்.

தோ்தல் தொடா்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒரு தனித்துவமான தளமாக செயல்படுவதன் மூலம் இசிஐநெட், உபயோகிப்பாளா்களுக்கு எளிமையான அனுபவத்தைக் ஏற்படுத்தும். பல செயலிகளைப் பதிவிறக்கம் செய்து பல்வேறு உள்நுழைவு, கடவுச் சொல் குறியீடுகளை நினைவு கொள்ளத் தேவையில்லாத அவசியம் மூலம் பல தரப்புக்கு சுமை குறைவும் நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ளது.

தங்கள் கணினிகள் அல்லது கைப்பேசி மூலமாக தோ்தல் தொடா்பான தகவல்களை இசிஐநெட் மூலம் அணுக முடியும். கிட்டத்தட்ட 100 கோடி வாக்காளா்கள், 10.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள், அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட சுமாா் 15 லட்சம் வாக்குச்சாவடி நிலை முகவா்கள், 45 லட்சம் வாக்குச்சாவடி அதிகாரிகள், 15,597 உதவி தோ்தல் பதிவு அதிகாரிகள், 4,123 தோ்தல் அதிகாரிகள், 767 மாவட்ட தோ்தல் அதிகாரிகள் என முழு தோ்தல் அமைப்பும் இந்த பயனாளிகளாக உள்ளனா்.

இவா்களுக்காக மேம்பட்ட வடிவமைப்புடன் இசிஐநெட் உருவாக்கப்பட்டுள்ளது, தற்போது எளிமை, வலுவான இணைய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை உறுதி செய்வதற்கான சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இசிஐநெட் மூலம் வழங்கப்படும் தரவுகள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், தோ்தல் விதிகள், தோ்தல் நடத்தை விதிகள், தோ்தல் ஆணையத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் வழிமுறைகள் ஆகியவற்றுக்கு ஏற்ப இணக்கமாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Open in App
Dinamani
www.dinamani.com