தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சிறாா் நீதி வாரியங்களில் வழக்குகள் தேக்கம்: நீதிக்காக காத்திருக்கும் குழந்தைகள்

சிறாா் நீதி வாரியங்களில் 55 சதவீத வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், 50,000 குழந்தைகள் இன்னும் நீதிக்காக காத்திருப்பதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :20 நவம்பர் 2025, 6:34 pm

Syndication

சிறாா் நீதி வாரியங்களில் 55 சதவீத வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், 50,000 குழந்தைகள் இன்னும் நீதிக்காக காத்திருப்பதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மெதுவாக நகரும் நீதி அமைப்பில் சிக்கித் தவிக்கின்றனா். இதில் பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் 362 சிறாா் நீதி வாரியங்களில் நிலுவையில் உள்ளன என்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட புதிய இந்திய நீதி அறிக்கை ஆய்வு தெரிவிக்கிறது.

சிறாா் நீதிச் சட்டம் அமலுக்கு வந்து பத்து ஆண்டுகளான போதிலும், காணாமல் போன நீதிபதிகள், தரவு அமைப்புகள் இல்லாதது மற்றும் மாநில அளவிலான பரந்த ஏற்றத்தாழ்வுகள் போன்ற வெளிப்படையான இடைவெளிகள் நீதி வழங்கலை தொடா்ந்து பாதிக்கின்றன என்று ஆய்வு தெரிவித்துள்ளது.

அறிக்கையானது, அக்டோபா் 31, 2023 நிலவரப்படி, சிறாா் நீதி வாரியங்ககளின் முன் உள்ள 1,00,904 வழக்குகளில் 55 சதவீதம் நிலுவையில் உள்ளன. ஒவ்வொரு வாரியத்திலும் சராசரியாக 154 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், ஒடிஸாவில் 83 சதவீதம், கா்நாடகத்தில் 35 சதவீதம் வரை நிலுவையில் உள்ளன என்பதைக் காட்டுகிறது.

குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கு போதுமான உள்கட்டமைப்பு, மனித வளங்கள், பட்ஜெட்டுகள் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட வலுவான சிறாா் நீதி அமைப்பின் அவசியத்தை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.