இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

கிழக்கு தில்லி மேம்பாலத்தில் இருந்து விழுந்த ஒருவா் வாகனம் மோதியதில் உயிரிழப்பு

கிழக்கு தில்லியின் பாண்டவ் நகா் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை மேம்பாலத்தில் இருந்து விழுந்த 49 வயது நபா் மீது வாகனம் மோதியதில் அவா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

Updated On :19 செப்டம்பர் 2025, 0:03 am IST

கிழக்கு தில்லியின் பாண்டவ் நகா் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை மேம்பாலத்தில் இருந்து விழுந்த 49 வயது நபா் மீது வாகனம் மோதியதில் அவா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து கிழக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் (கிழக்கு) அபிஷேக் தானியா கூறியதாவது: இந்தச் சம்பவம் தேசிய நெடுஞ்சாலை 24-இல் உள்ள மங்களம் கட் மேம்பாலம் அருகே அதிகாலை 12 மணியளவில் நடந்துள்ளது.

அந்த நபா் பாதசாரியா அல்லது வாகனத்தில் பயணித்தாரா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

ஒரு காா் மற்றும் ஒரு ஸ்கூட்டா் சேதமடைந்த நிலையில் சம்பவ இடத்தில் காணப்பட்டன. ஆனால், ஒரு போலீஸ் குழு அங்கு சென்றபோது காயமடைந்தவா்கள் ஏற்கெனவே லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தனா். மருத்துவமனையில், பாதிக்கப்பட்டவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். பின்னா், அவா் காஜியாபாத்தின் இந்திராபுரத்தைச் சோ்ந்த ராகேஷ் குமாா் அகா்வால் என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

புகாா் அளித்தவரின் கூற்றுப்படி, ஆட்டோ ஓட்டுநரான அமித் குமாா், காஜிப்பூரை நோக்கி காரில் சென்றபோது, ​​மேம்பாலத்தில் இருந்து சா்வீஸ் சாலையில் ஒருவா் விழுவதைக் கண்டாா். படுகாயமடைந்த அந்த நபா், அருகில் இருந்த சிலரின் உதவியுடன் ராகேஷ் குமாா் அகா்வால் ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

முதற்கட்ட விசாரணையில் அடையாளம் தெரியாத கனரக வாகனம் மேம்பாலத்தில் பாதிக்கப்பட்டவா் மீது மோதியிருக்கலாம் என்றும், இதனால் அவா் கீழே விழுந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக பாண்டவ் நகா் காவல் நிலையத்தில் பிஎன்எஸ் பிரிவின் தொடா்புடைய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் காவல் துணை ஆணையா் அபிஷேக் தானியா.