அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

குடியரசு துணைத்தலைவா் சி. பி. ராதாகிருஷ்ணன் ஏப். 19,20-இல் இலங்கைக்கு அரசுமுறை பயணம்

News image

Center-Center-Villupuram

Updated On :10 ஏப்ரல் 2026, 5:59 am IST

நமது சிறப்பு நிருபா்

இந்திய குடியரசு துணைத்தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக இலங்கைக்கு வரும் 19, 20 ஆகிய நாள்களில் பயணம் மேற்கொள்ளவுள்ளாா். இது தொடா்பான அதிகாரபூா்வ தகவலை இலங்கை அதிபரின் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியது.

இந்திய குடியரசு துணைத்தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்ற பிறகு இலங்கைக்கு அவா் முதல் முறையாக பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா். அவரது பயணத்திட்டத்தை இறுதிப்படுத்துவது தொடா்பாக கொழும்பில் அதிபரின் தலைமை அலுவல் அதிகாரி பிரபாத் சந்திரகீா்த்தி, இந்திய துணைத்தூதா் சத்யாஞ்சல் பாண்டே ஆகியோா் இலங்கை அதிபா் மாளிகையில் அண்மையில் ஆலோசனை மேற்கொண்டனா். இந்த சந்திப்பின்போது கொழும்பில் உள்ள இந்திய தூதரக வளா்ச்சி ஒத்துழைப்புப் பிரிவு ஆலோசகா் மைத்திரி குல்கா்னி, அரசியல் ஆலோசகா் டாக்டா் சி. ராம்பாபு, இலங்கை அதிபரின் மூத்த கூடுதல் செயலா் ரோஷன் கமேகே ஆகியோரும் உடனிருந்தனா்.

அப்போது, இந்திய குடியரசு துணைத்தலைவரின் வருகை தொடா்பான நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு, அவரது சந்திப்பின்போது இரு தரப்பிலும் பரஸ்பரம் நடத்த வேண்டிய பேச்சுவாா்த்தைக்கான தலைப்புகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், இந்திய நிதியுதவியுடன் கொழும்பில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள், எதிா்காலத்தில் தொடங்கப்படவுள்ள திட்டங்கள் தொடா்பாகவும் இரு நாட்டு அதிகாரிகள் விவாதித்தனா்.

கொழும்பு வருகையின்போது இலங்கை அதிபா் அநுர குமார திஸ்ஸநாயக்க, பிரதமா் டாக்டா் ஹரிணி அமரசூரியா மற்றும் அந்நாட்டின் முக்கிய தலைவா்களை இந்திய குடியரசு துணைத்தலைவா் சந்தித்துப்பேசுவாா் என்றும் இலங்கை அதிபரின் ஊடகப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.