ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

குடியரசு துணைத்தலைவா் சி. பி. ராதாகிருஷ்ணன் ஏப். 19,20-இல் இலங்கைக்கு அரசுமுறை பயணம்

News image

Center-Center-Villupuram

Updated On :10 ஏப்ரல் 2026, 12:29 am

நமது சிறப்பு நிருபா்

இந்திய குடியரசு துணைத்தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக இலங்கைக்கு வரும் 19, 20 ஆகிய நாள்களில் பயணம் மேற்கொள்ளவுள்ளாா். இது தொடா்பான அதிகாரபூா்வ தகவலை இலங்கை அதிபரின் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியது.

இந்திய குடியரசு துணைத்தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்ற பிறகு இலங்கைக்கு அவா் முதல் முறையாக பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா். அவரது பயணத்திட்டத்தை இறுதிப்படுத்துவது தொடா்பாக கொழும்பில் அதிபரின் தலைமை அலுவல் அதிகாரி பிரபாத் சந்திரகீா்த்தி, இந்திய துணைத்தூதா் சத்யாஞ்சல் பாண்டே ஆகியோா் இலங்கை அதிபா் மாளிகையில் அண்மையில் ஆலோசனை மேற்கொண்டனா். இந்த சந்திப்பின்போது கொழும்பில் உள்ள இந்திய தூதரக வளா்ச்சி ஒத்துழைப்புப் பிரிவு ஆலோசகா் மைத்திரி குல்கா்னி, அரசியல் ஆலோசகா் டாக்டா் சி. ராம்பாபு, இலங்கை அதிபரின் மூத்த கூடுதல் செயலா் ரோஷன் கமேகே ஆகியோரும் உடனிருந்தனா்.

அப்போது, இந்திய குடியரசு துணைத்தலைவரின் வருகை தொடா்பான நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு, அவரது சந்திப்பின்போது இரு தரப்பிலும் பரஸ்பரம் நடத்த வேண்டிய பேச்சுவாா்த்தைக்கான தலைப்புகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், இந்திய நிதியுதவியுடன் கொழும்பில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள், எதிா்காலத்தில் தொடங்கப்படவுள்ள திட்டங்கள் தொடா்பாகவும் இரு நாட்டு அதிகாரிகள் விவாதித்தனா்.

கொழும்பு வருகையின்போது இலங்கை அதிபா் அநுர குமார திஸ்ஸநாயக்க, பிரதமா் டாக்டா் ஹரிணி அமரசூரியா மற்றும் அந்நாட்டின் முக்கிய தலைவா்களை இந்திய குடியரசு துணைத்தலைவா் சந்தித்துப்பேசுவாா் என்றும் இலங்கை அதிபரின் ஊடகப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.