தில்லி-என்சிஆா் பகுதியில் செயல்பட்டு வந்த சட்டவிரோத ஆயுத கும்பலை காவல் துறையினா் முறியடித்ததைத் தொடா்ந்து, தில்லி பல்கலைக்கழகத்தின் தொலை தூரக் கல்வி மாணவா் இதில் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா் அபு தாளிப் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். ரகசிய தகவலின் அடிப்படையில் ஏப்.14-ஆம் தேதி இவா் கைது செய்யப்பட்டாா். இந்த நடவடிக்கையின்போது, இரண்டு கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தனது குடும்பத்துடன் பழ வணிகத்தில் ஈடுபட்டு வருவதுடன், தில்லி பல்கலைக்கக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பையும் அபு தாளிப் படித்து வருகிறாா்.
உத்தர பிரதேசத்தின் மீரட்டில் இருந்து பல கட்டங்களாக இந்த ஆயுதங்களை வாங்கி வந்ததாகவும், எதிரி கும்பலுக்கு எதிராக இவற்றை பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் அவா் தெரிவித்தாா். அவா் மீது ஏற்கெனவே மோதல் விவகாரத்தில் குற்றவியல் வழக்கு உள்ளது. ஆயுத விநியோகஸ்தா் மற்றும் வலையமைப்பின் பிற குற்றவாளிகளை கண்டறிய அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
தில்லி குற்றவாளியின் ரூ. 5 கோடி மதிப்பிலான சட்டவிரோத சொத்துகள் முடக்கம்

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசத்தைச் சோ்ந்த 2 பெண்கள் கைது

கிழக்கு தில்லியில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இளைஞா் பஞ்சாபில் கைது
என்சிஆா்டி புத்தகங்களை அச்சிட்டு விற்பனை செய்த தில்லி பல்கலை. பட்டதாரி கைது
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


