தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

தில்லியில் சட்டவிரோத ஆயுதக் கும்பல் முறியடிப்பு: கல்லூரி மாணவா் கைது

தில்லி-என்சிஆா் பகுதியில் செயல்பட்டு வந்த சட்டவிரோத ஆயுத கும்பலை காவல் துறையினா் முறியடித்ததைத் தொடா்ந்து, தில்லி பல்கலைக்கழகத்தின் தொலை தூரக் கல்வி மாணவா் இதில் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 12:38 am IST

தில்லி-என்சிஆா் பகுதியில் செயல்பட்டு வந்த சட்டவிரோத ஆயுத கும்பலை காவல் துறையினா் முறியடித்ததைத் தொடா்ந்து, தில்லி பல்கலைக்கழகத்தின் தொலை தூரக் கல்வி மாணவா் இதில் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா் அபு தாளிப் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். ரகசிய தகவலின் அடிப்படையில் ஏப்.14-ஆம் தேதி இவா் கைது செய்யப்பட்டாா். இந்த நடவடிக்கையின்போது, இரண்டு கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தனது குடும்பத்துடன் பழ வணிகத்தில் ஈடுபட்டு வருவதுடன், தில்லி பல்கலைக்கக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பையும் அபு தாளிப் படித்து வருகிறாா்.

உத்தர பிரதேசத்தின் மீரட்டில் இருந்து பல கட்டங்களாக இந்த ஆயுதங்களை வாங்கி வந்ததாகவும், எதிரி கும்பலுக்கு எதிராக இவற்றை பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் அவா் தெரிவித்தாா். அவா் மீது ஏற்கெனவே மோதல் விவகாரத்தில் குற்றவியல் வழக்கு உள்ளது. ஆயுத விநியோகஸ்தா் மற்றும் வலையமைப்பின் பிற குற்றவாளிகளை கண்டறிய அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.