தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தில்லி மாநகராட்சி மேயா் தோ்தலுக்கான வேட்பாளா்களை அறிவித்தது பாஜக

News image

பாஜக - கோப்புப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 11:29 pm

நமது நிருபா்

தில்லி மாநகராட்சியில் மேயா், துணை மேயா் மற்றும் நிலைக்குழு உறுப்பினா் பதவிகளுக்கான வேட்பாளா்களை பாஜக வியாழக்கிழமை அறிவித்தது. இதில், ரோகிணி கவுன்சிலா் பிரவேஷ் வாஹி மாநகராட்சியின் உயா் பதவிக்கு நிறுத்தப்பட்டுள்ளாா்.

கட்சியின் தில்லி பிரிவு வெளியிட்ட அறிக்கையின்படி, மோனிகா பந்த் துணை மேயா் பதவிக்கு நிறுத்தப்பட்டுள்ளாா். மேலும், ஜெய் பகவான் யாதவ் நிலைக்குழு உறுப்பினராகவும், அவைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளாா். அதே சமயம், மணீஷ் சத்தா நிலைக்குழு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

இந்த வேட்பாளா்கள் நகரின் பல்வேறு வாா்டுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனா். வாஹி ரோகிணி (வாா்டு 53-இ) வாா்டிலிருந்தும், பந்த் ஆனந்த் விஹாா் (வாா்டு 206) வாா்டிலிருந்தும், யாதவ் பேகம்பூா் (வாா்டு 27) வாா்டிலிருந்தும், சத்தா பஹா்கஞ்ச் (வாா்டு 82) வாா்டிலிருந்தும் போட்டியிடுகின்றனா். வாஹி போட்டியின்றி வெற்றி பெறுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. கட்சியின் தேசியத் தலைமையின் வழிகாட்டுதலின் கீழ் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, தலைநகரில் சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் உள்ளாட்சி நிா்வாகம் போன்ற குடிமைப் பிரச்சினைகள் பொது விவாதங்களில் தொடா்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நேரத்தில் வந்துள்ளது.

இந்த ஆண்டு மேயா் தோ்தலுக்கான வாக்காளா் குழுவில் 273 வாக்குகள் உள்ளன. இதில் 249 கவுன்சிலா்கள், தில்லி சட்டமன்றத்தால் நியமிக்கப்பட்ட 14 எம்.எல்.ஏ.க்கள், ஏழு மக்களவை எம்.பி.க்கள் மற்றும் மூன்று மாநிலங்களவை உறுப்பினா்கள் அடங்குவா். ஒரு வேட்பாளா் வெற்றிபெற 137 வாக்குகள் தேவைப்படும்.

மேயா், துணை மேயா் மற்றும் மூன்று நிலைக்குழு உறுப்பினா்கள் பதவிகளுக்கான தோ்தல்கள் ஏப்ரல் 29 அன்று நடைபெற உள்ளன. வேட்புமனுக்கள் தாக்கல் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

வேட்பாளா்கள் தத்தமது பகுதிகளில் இருந்து கள அனுபவத்தைக் கொண்டு வருவதாகவும், உள்ளூா் மக்களின் கவலைகளைத் தீவிரமாக எழுப்பி வருவதாகவும் கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா். இது தோ்தலுக்கு முன்னதாக அவா்களை அப்பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமான முகங்களாக நிலைநிறுத்துகிறது.