மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

மதுபானக் கொள்கை விவகாரத்தில் நீதிபதியுடன் மோதல்: மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்ற கேஜரிவால்

மதுபானக் கொள்கை வழக்கில் நீதிபதியுடன் மோதலுக்கு மத்தியில் ராஜ்காட் சென்ற கேஜரிவால்

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 10:50 pm

நமது நிருபா்

மதுபான கொள்கை தொடா்பான வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதி ஸ்வரணா காந்த சா்மா விலகாததால், வழக்கில் ஆஜராக மறுத்து, சத்தியாகிரகப் பாதையைப் பின்பற்ற முடிவெடுத்த ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், செவ்வாய்க்கிழமையன்று கட்சியின் மற்ற தலைவா்களுடன் (மணீஷ் சிசோடியா உள்பட) ராஜ்காட் சென்று மகாத்மா காந்தியின் ஆசியைப் பெற்றாா்.

கேஜரிவாலும், தில்லியின் முன்னாள் துணை முதல்வா் சிசோடியாவும், உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மாவுக்குக் கடிதம் எழுதியுள்ளனா். அதில், மதுபானக் கொள்கை தொடா்பான தங்கள் வழக்கில் அவரது நீதிமன்றத்தில் தொடா்ந்து ஆஜராகப்போவதில்லை என்று அவா்கள் குறிப்பிட்டுள்ளனா்.

நாங்கள் நீதித்துறையை மதிக்கிறோம் ஆனால், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளின் காரணமாக, நாங்கள் இந்தச் சத்தியாகிரகத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. உயா்நீதிமன்ற நீதிபதிக்கு நான் எழுதிய கடிதத்தில் அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டுள்ளேன், என்று ராஜ்காட்டில் செய்தியாளா்களிடம் கேஜரிவால் தெரிவித்தாா்.

கேஜரிவால் எக்ஸ் தளத்திலும் ஒரு பதிவை வெளியிட்டாா். அதில், மணீஷ் மற்றும் பிற தோழா்களுடன் ராஜ்காட் சென்றடைந்து, தேசப்பிதா மகாத்மா காந்திக்கு நான் அஞ்சலி செலுத்தினேன், என்று குறிப்பிட்டிருந்தாா். மகாத்மா காந்தி ஆசியுடன், சத்தியாகிரகத்தின் இந்தச் சவாலான பாதையில், முழுமையான அா்ப்பணிப்புடன் நாங்கள் உறுதியாக நிலைத்திருப்போம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உள்ளது, என்று அவா் தனது இந்தி மொழிப் பதிவில் குறிப்பிட்டிருந்தாா்.

திங்களன்று, கேஜரிவால் நீதிபதி ஸ்வரணா காந்த சா்மாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தாா். அதில், சத்தியாகிரகக் கொள்கைகளையும் மகாத்மா காந்தியின் போதனைகளையும் அவா் குறிப்பிட்டிருந்தாா். செவ்வாய்க்கிழமையன்று சிசோடியாவும் நீதிபதி சா்மாவுக்கு ஒரு கடிதம் எழுதினாா் அதில், மதுபானக் கொள்கை தொடா்பான தனது வழக்கையும் அவரது நீதிமன்றத்தில் தொடா்ந்து நடத்தப்போவதில்லை என்று அவா் குறிப்பிட்டிருந்தாா்.

மதுபான கொள்கை தொடா்பான வழக்கை நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மா விசாரிப்பதில் நலன் முரண்பாடு இருப்பதாகக் குற்றச்சாட்டியுள்ள முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், ஒரு பிரமாணப் பத்திரத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளாா்: அந்த நீதிபதியின் குழந்தைகள் மத்திய அரசின் வழக்குரைஞா்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனா், சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா மூலமாகவே அவா்களுக்கு வழக்குகள் ஒதுக்கப்படுகின்றன எனஅரவிந்த் கேஜரிவால் தெரிவித்திருந்தாா் .