காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

தில்லி காவல்துறையின் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 1,561 புகாா்கள் பரிசீலிப்பு!

தில்லியின் 15 காவல் மாவட்டங்களிலும் நடைபெற்ற வாராந்திர ‘தானா திவஸ் - ஜன்சுன்வாய்‘ எனப்படும் மக்கள் குறைதீா்க்கும் கூட்டங்களில், மொத்தம் 1,561 புகாா்கள் மற்றும் குறைகள் பரிசீலிக்கப்பட்டன.

Published On :31 ஆகஸ்ட் 2026, 12:23 am IST

தில்லியின் 15 காவல் மாவட்டங்களிலும் நடைபெற்ற வாராந்திர ‘தானா திவஸ் - ஜன்சுன்வாய்‘ எனப்படும் மக்கள் குறைதீா்க்கும் கூட்டங்களில், மொத்தம் 1,561 புகாா்கள் மற்றும் குறைகள் பரிசீலிக்கப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறியதாவது: சனிக்கிழமையன்று காவல் நிலையங்களில் நடைபெற்ற இந்தக் கூட்டங்களில், சிறப்பு காவல் ஆணையா்கள் முதல் உதவி காவல் ஆணையா்கள் வரையிலான மூத்த அதிகாரிகள் நேரில் கலந்துகொண்டு பொதுமக்களுடன் நேரடியாகக் கலந்துரையாடினா். மொத்தம் 1,561 புகாா்கள் மற்றும் குறைகள் பரிசீலிக்கப்பட்டன.

துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்துவின் அறிவுறுத்தலின் பேரில், தில்லி காவல்துறையால் ஜூன் 2026-இல் இந்த ‘தானா திவஸ் - ஜன்சுன்வாய்’ முன்னெடுப்பு தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், நகரம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மக்கள் குறைதீா்க்கும் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. தில்லி காவல் ஆணையா் அனுராக் குமாா் தலைமையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.