மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘நிகாஹ்’ அறிவிப்பு போலியானது: ஜாமியா பல்கலை. நிராகரிப்பு!

புனித ரமலான் மாதத்தில் ஒன்றாக நிற்கும் சிறுவா், சிறுமிகளுக்கு நிகாஹ் ஏற்பாடு செய்ய பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் அறிவிப்பை ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் மறுத்துள்ளது.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 7:04 pm

Syndication

புனித ரமலான் மாதத்தில் ஒன்றாக நிற்கும் சிறுவா், சிறுமிகளுக்கு நிகாஹ் ஏற்பாடு செய்ய பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் அறிவிப்பை ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் மறுத்துள்ளது.

பிப்ரவரி 20 தேதியிட்டதாகக் கூறப்படும் அறிவிப்பு ‘முற்றிலும் போலியானது’ என்றும், அத்தகைய உத்தரவு எதுவும் அதன் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை என்றும் அந்த சுற்றறிக்கையில் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

வைரலாகும் செய்தியை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று மாணவா்கள் மற்றும் ஊழியா்களை நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.. இது நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் இருப்பதாகத் தெரிகிறது என்று அதிகாரப்பூா்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போலி அறிவிப்பு பரவுவது தொடா்பாக தில்லி காவல்துறையிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.