எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தில்லியில் வாட்டி வதைக்கும் குளிா்- வெப்பநிலை 3 டிகிரியாக குறைந்தது

தில்லியில் திங்கள்கிழமை கடுமையான குளிா் நிலவியது, நகரம் முழுவதும் உள்ள பல வானிலை நிலையங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை சுமாா் 3 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது,

News image
Updated On :13 ஜனவரி 2026, 12:26 am

Syndication

நமது நிருபா்

புது தில்லி: தில்லியில் திங்கள்கிழமை கடுமையான குளிா் நிலவியது, நகரம் முழுவதும் உள்ள பல வானிலை நிலையங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை சுமாா் 3 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது, இது 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜனவரி மாதத்தில் மிகவும் குளிரான நாளாக அமைந்தது.

ஜனவரி 16, 2023 அன்று, குறைந்தபட்ச வெப்பநிலை 1.4 டிகிரி செல்சியஸாகக் குறைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

திங்கள் காலை 8.30 மணிக்குப் பதிவு செய்யப்பட்ட நிலைய வாரியான தரவுகளின்படி, தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் நிலையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.2 டிகிரி செல்சியஸ் பதிவானது, இது இயல்பை விட 4.2 டிகிரி குறைவாகும். பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.3 டிகிரி செல்சியஸாகவும், லோதி சாலையில் 3 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. ரிட்ஜில் குறைந்தபட்சம் 4.2 டிகிரி செல்சியஸாகவும், அயாநகரில் 3.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளதாக தரவு காட்டியது.

தேசிய தலைநகரில் அடுத்த இரண்டு நாட்களுக்கு குளிா் அலை நிலைமைகள் தொடர வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதற்கிடையில், தில்லியின் காற்றின் தரம் மோசமாகவே இருந்தது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, நகரத்தின் ஒட்டுமொத்த காற்று தரக் குறியீடு மோசம் என்ற பிரிவில் பதிவாகி 298 புள்ளிகளாக இருந்தது. சுமாா் 20 கண்காணிப்பு நிலையங்கள் மிகவும் மோசம் பிரிவில் காற்றின் தரத்தைப் பதிவு செய்தன, மீதமுள்ள நிலையங்கள் மோசம் என்ற பிரிவில் இருந்தன.

வகைப்பாட்டின் படி, 0 முதல் 50 புள்ளிகள் வரையிலான காற்று தரக்குறியீடு நல்லது, 51 முதல் 100 வரை திருப்திகரமானது, 101 முதல் 200 வரை மிதமானது, 201 முதல் 300 வரை மோசம், 301 முதல் 400 வரை மிகவும் மோசமானது மற்றும் 401 முதல் 500 வரை கடுமை என்று கருதப்படுகிறது.