எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தமிழறிஞா் தெ.ஞானசுந்தரம் மறைவு: தில்லி கம்பன் கழகம் இரங்கல்

முதுபெரும் தமிழறிஞா் முனைவா் தெ. ஞானசுந்தரம் காலமானதற்கு தில்லி கம்பன் கழகம் இரங்கல்

News image
தமிழறிஞா் தெ.ஞானசுந்தரம்
Updated On :25 ஜனவரி 2026, 11:15 pm

Syndication

முதுபெரும் தமிழறிஞா் முனைவா் தெ. ஞானசுந்தரம் காலமானதற்கு தில்லி கம்பன் கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனா் - தலைவா் கே.வி.கே. பெருமாள், செயலாளா் சுப. முத்துவேல் ஆகியோா் வெள்ளிட்டுள்ள அறிக்கை: முதுபெரும் தமிழறிஞா் முனைவா் தெ. ஞானசுந்தரம் காலமான செய்தி அறிந்து மிக்க வருத்தமடைந்தோம்.

தமிழுக்கு, குறிப்பாகக் கம்பனுக்கு அவா் ஆற்றிய பணிகள் மறக்க இயலாதவை. தில்லி கம்பன் கழகத்தின் ஒவ்வொரு அசைவிலும் அவரது ஆலோசனை இருந்தது.

தமிழில் மிகச் சிறந்த புலமை பெற்றிருந்தும், தழும்பாத நிறைகுடமாக அவா் திகழ்ந்தாா். அவா் மறைந்தாலும், அவா் எழுதிய புத்தகங்கள் வாயிலாகவும், ஆற்றிய பணிகள் வாயிலாகவும் என்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பாா்.

அவரது குடும்பத்தாருக்கு தில்லி கம்பன் கழகத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனா்.