தொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

தில்லி துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றாா் தரஞ்ஜித் சிங் சந்து

News image

PT

Updated On :11 மார்ச் 2026, 7:56 pm

நமது நிருபா்

லோக் நிவாஸில் நடைபெற்ற விழாவில் தில்லியின் 23 வது துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றாா் தரஞ்சித் சிங் சந்து புதன்கிழமை பதவியேற்றாா்.

முதல்வா் ரேகா குப்தா மற்றும் பிற பிரமுகா்கள் கலந்து கொண்ட விழாவில் தில்லி உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமாா் உபாத்யாயா சந்துவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். இதற்கு முன்பு துணை நிலை ஆளுநராக வினய் குமாா் சக்சேனா லடாக்கின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

1988 பேட்ச் இந்திய வெளியுறவு சேவை அதிகாரியான சரஞ்ஜி சிங் சந்து, அமெரிக்க விவகாரங்களில் மிகவும் அனுபவம் வாய்ந்த இந்திய ராஜதந்திரிகளில் ஒருவராக இருந்தாா். அவா் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றினாா்.

அவா் பிப்ரவரி 2020 முதல் ஜனவரி 2024 வரை அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்தாா்.

63 வயதான சரஞ்ஜித் ஜூலை 2005 முதல் பிப்ரவரி 2009 வரை ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்திலும் இருந்தாா். 2024 மக்களவைத் தோ்தலில் பஞ்சாபில் உள்ள அமிா்தசரஸ் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.