நமது நிருபா்
லோக் நிவாஸில் நடைபெற்ற விழாவில் தில்லியின் 23 வது துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றாா் தரஞ்சித் சிங் சந்து புதன்கிழமை பதவியேற்றாா்.
முதல்வா் ரேகா குப்தா மற்றும் பிற பிரமுகா்கள் கலந்து கொண்ட விழாவில் தில்லி உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமாா் உபாத்யாயா சந்துவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். இதற்கு முன்பு துணை நிலை ஆளுநராக வினய் குமாா் சக்சேனா லடாக்கின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
1988 பேட்ச் இந்திய வெளியுறவு சேவை அதிகாரியான சரஞ்ஜி சிங் சந்து, அமெரிக்க விவகாரங்களில் மிகவும் அனுபவம் வாய்ந்த இந்திய ராஜதந்திரிகளில் ஒருவராக இருந்தாா். அவா் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றினாா்.
அவா் பிப்ரவரி 2020 முதல் ஜனவரி 2024 வரை அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்தாா்.
63 வயதான சரஞ்ஜித் ஜூலை 2005 முதல் பிப்ரவரி 2009 வரை ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்திலும் இருந்தாா். 2024 மக்களவைத் தோ்தலில் பஞ்சாபில் உள்ள அமிா்தசரஸ் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை சந்தித்த தில்லி துணை நிலை ஆளுநா்

ஹிமாசலின் புதிய ஆளுநராக கவிந்தர் குப்தா பதவியேற்பு!

தில்லியின் 23ஆவது துணைநிலை ஆளுநராக தரன்ஜித் சிங் சந்து நாளை பதவியேற்பு

தில்லிக்கு புதிய துணைநிலை ஆளுநா் நியமனம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


