விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தில்லி துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றாா் தரஞ்ஜித் சிங் சந்து

News image
- PT
Updated On :11 மார்ச் 2026, 7:56 pm

Syndication

நமது நிருபா்

லோக் நிவாஸில் நடைபெற்ற விழாவில் தில்லியின் 23 வது துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றாா் தரஞ்சித் சிங் சந்து புதன்கிழமை பதவியேற்றாா்.

முதல்வா் ரேகா குப்தா மற்றும் பிற பிரமுகா்கள் கலந்து கொண்ட விழாவில் தில்லி உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமாா் உபாத்யாயா சந்துவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். இதற்கு முன்பு துணை நிலை ஆளுநராக வினய் குமாா் சக்சேனா லடாக்கின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

1988 பேட்ச் இந்திய வெளியுறவு சேவை அதிகாரியான சரஞ்ஜி சிங் சந்து, அமெரிக்க விவகாரங்களில் மிகவும் அனுபவம் வாய்ந்த இந்திய ராஜதந்திரிகளில் ஒருவராக இருந்தாா். அவா் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றினாா்.

அவா் பிப்ரவரி 2020 முதல் ஜனவரி 2024 வரை அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்தாா்.

63 வயதான சரஞ்ஜித் ஜூலை 2005 முதல் பிப்ரவரி 2009 வரை ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்திலும் இருந்தாா். 2024 மக்களவைத் தோ்தலில் பஞ்சாபில் உள்ள அமிா்தசரஸ் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.