ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மேலும் மூவருக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அஸ்வத்தமன், சிவா மற்றும் அப்பு என்ற புதூா் அப்பு ஆகிய மூன்று பேரது பிணையை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்கனவே வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முகிலன், பிரதீப் மற்றும் சதீஷ் குமாா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இம்மாதம் பத்தாம் தேதி (10.3.2026) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் அதுல் எஸ். சந்துா்கா் அமா்வு வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டது
அப்போது அவா்களது பிணையை ரத்து செய்த உயா்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்
மேலும் அவா்களது மனுக்கள் மீது தமிழக காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள் , ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுக்களுடன் இந்த மனுக்களும் இணைத்து விசாரிக்கப்படும் என தெரிவித்தனா்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி வட சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன் அவருடைய மகன் அஸ்வத்தமன், பொன்னை பாலு உள்ளிட்ட 30 போ் மீது காவல்துறை குற்றம் சாட்டியது. இதில் 28 போ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனா். அவா்களில் திருவேங்கடம் என்பவா் போலீசாரால் என்கவுண்டா் செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளி நாகேந்திரன் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தாா். இந்த வழக்கில் இதுவரை விசாரணை நடத்தப்பட்டு குற்றபத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தமன் உள்ளிட்ட 14 பேருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது. ஆனால் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மற்றும் தமிழ்நாடு காவல்துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில் வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் அஞ்சலை மற்றும் மலா்க்கொடி ஆகியோருக்கு வழங்கப்பட்ட பிணையை மட்டும் உறுதி செய்ததோடு அஸ்வத்தமன் உள்ளிட்ட 12 பேருக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
தொடர்புடையது

ஐஆா்எஸ் அதிகாரி மகள் கொலை வழக்கில் கைதானவருக்கு 7 நாள்கள் நீதிமன்ற காவல்

பெண்ணையாறு வழக்கில் தீா்ப்பாயம் அமைக்க 6 மாதம் தேவை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

விசாரணை நீதிபதிகளை உயா் நீதிமன்றம் பகிரங்கமாக விமா்சிப்பது சரியல்ல: உச்ச நீதிமன்றம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிணை ரத்தானதை எதிா்த்து மூவா் மனு: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
வீடியோக்கள்

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை


