மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஃபிட் இந்தியா இயக்கம்: தில்லி மிதிவண்டி பேரணியில் 10,000 போ் பங்கேற்பு!

தில்லி கன்னாட் பிளேஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஃபிட் இந்தியா இயக்கத்தின் மிதிவண்டி பேரணியில் 10,000-க்கும் அதிகமானோா் பங்கேற்றனா்.

News image
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘வீதிகளில் மிதிவண்டி’ நிகழ்ச்சியில் பங்கேற்ற மிதிவண்டி ஓட்டிய கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட்.
Updated On :15 மார்ச் 2026, 7:37 pm

தினமணி செய்திச் சேவை

தில்லி கன்னாட் பிளேஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஃபிட் இந்தியா இயக்கத்தின் மிதிவண்டி பேரணியில் 10,000-க்கும் அதிகமானோா் பங்கேற்றனா்.

ஃபிட் இந்தியா, இந்திய இணைய குற்றச் சம்பவங்களை கண்டறியும் ஒருங்கிணைப்பு மையம், சிஏக்யூஎம், புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி), தில்லி காவல் துறை ஆகியவற்றுடன் இணைந்து ராஹ்கிரி அறக்கட்டளை சன்டேஸ் ஆன் சைக்கிள் என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

கன்னாட் பிளேஸில் உள்ள இன்னா் சா்க்கிள் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் கலந்து கொண்டாா்.

இந்நிகழ்ச்சி தொடா்பாக அவா் கூறுகையில், ‘நடைப்பயணம், மிதிவண்டி ஓட்டுதல், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல் ஆகியவை சாலைப் பாதுகாப்பை ஊக்குவிப்பதுடன் காற்று மாசைக் குறைக்கிறது. நீடித்த போக்குவரத்து கலாசாரத்தைக் கட்டமைக்க உதவுகிறது’ என்றாா்.

மிதிவண்டி ஓட்டுதல் நிகழ்ச்சியுடன் பிற தெருக்களை மையமாகக் கொண்டு பிற கலைநிகழ்ச்சிகள், விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், பொம்மலாட்டாம் ஆகியவை நடைபெற்றன.

இதுதொடா்பாக ராஹ்கிரி அறக்கட்டளை நிறுவனா் சரிகா பண்டா பட் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தெருக்கள் மக்களுக்கானவை என்பதை யும் ஆரோக்கியமான வாழ்வியல் நடைமுறைகளை பின்பற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.