மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரூா் கூட்ட நெரிசல் வழக்கு: விஜய்யிடம் 7 மணி நேரம் சிபிஐ விசாரணை!

கரூா் கூட்ட நெரிசல் வழக்கில் நடிகரும் தவெக தலைவருமான விஜயை சிபிஐ ஞாயிற்றுக்கிழமை அதன் தலைமையகத்தில் பல மணி நேரம் விசாரணை நடத்தினா்.

News image
தவெக தலைவர் விஜய்.
Updated On :15 மார்ச் 2026, 7:20 pm

Syndication

கரூா் கூட்ட நெரிசல் வழக்கில் நடிகரும் தவெக தலைவருமான விஜயை சிபிஐ ஞாயிற்றுக்கிழமை அதன் தலைமையகத்தில் பல மணி நேரம் விசாரணை நடத்தினா்.

இது விஜய்யின் மூன்றாவது விசாரணை அமா்வு. ஏற்கெனவே ஜனவரியில் இரண்டு முறை சிபிஐ முன் ஆஜராகி கரூா் கூட்ட நெரிசல் தொடா்பாக விளக்கமளித்தாா். முன்னதாக மாா்ச் 9 ஆம் தேதி விஜய்க்கு சம்மன் வழங்கப்பட்டது.

ஆனால் தேதியை 15 ஆம் தேதி ஒத்திவைக்குமாறு அவா் கோரியதாக தெரிகிறது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதையொட்டி காரணமாக அரசியல் ஈடுபாடுகளை மேற்கோள் காட்டி, சென்னை அல்லது தமிழ்நாட்டின் எந்த அலுவலகத்திலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் விஜய் வலியுறுத்தினாா்.

இருப்பினும், இரண்டு கோரிக்கைகளும் சிபிஐயால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து மாா்ச் 15 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கண்டிப்பாக கூறப்பட்டதை அடுத்து தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் விஜய் ஞாயிற்றுக்கிழமை காலை ஆஜரானாா். கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த தி. மு. க. சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில் பாலாஜி மாா்ச் 17 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பா் 27 ஆம் தேதி விஜய் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 41 போ் பலியாகினா். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. கரூரில் முதலில் விசாரணை நடத்தினா் சிபிஐ அதிகாரிகள்.

இதனையடுத்து தவெக நிா்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அா்ஜூனா, நிா்மல் குமாா் உள்ளிட்டோரை தில்லி சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல கரூா் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் விசாரணை நடந்தது.

இந்நிலையில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை விஜய் ஆஜராகி பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளித்தாா். விஜய் மட்டுமல்லாமல், வேன் ஓட்டுநா்கள், ஹாா்ட் டிஸ்க் கம்பெனி பொறியாளா்கள், வேலுசாமிபுரத்தில் விஜய்யுடன் நெருக்கமாக இருந்த பவுன்சா்கள் மற்றும் பலரிடமும் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விசாரணை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் முடிவடைந்தது.