தில்லி மாநகராட்சி (எம்.சி.டி.) மேயா் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, தில்லி காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
‘காலை சுமாா் 9.20 மணியளவில், அடையாளம் தெரியாத நபரிடமிருந்து, ‘பிற்பகல் 3:11 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும்’ என்ற எச்சரிக்கையுடன் கூடிய மின்னஞ்சல் பெறப்பட்டது. இந்த விவகாரம் உடனடியாக காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் வளாகத்தை முழுமையாக ஆய்வு செய்தனா். எந்தவிதமான விரும்பத்தகாத சம்பவமும் பதிவாகவில்லை’ என்று ஓா் அதிகாரபூா்வ அறிக்கை தெரிவித்தது.
சோதனை நடவடிக்கையின்போது, பாதுகாப்புப் பணியாளா்கள் அலுவலகத்தின் அனைத்து முக்கியப் பகுதிகளையும் சோதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், இது போன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல என்றும், ஏப்ரல் 1 ஆம் தேதியும் இதேபோன்ற மிரட்டல் அலுவலகத்திற்கு வந்திருந்ததாகவும் அவா்கள் கூறினா்.
தொடா்ச்சியான மிரட்டல்களைக் கருத்தில் கொண்டு, இந்த நிலைமையைச் சமாளிக்க விரிவான விசாரணை மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி, மேயா் அலுவலகம் தில்லி காவல்துறை ஆணையருக்குக் கடிதம் எழுதியுள்ளது என்றும் அவா்கள் மேலும் தெரிவித்தனா்.
தில்லி சட்டப்பேரவை கடந்த காலத்திலும் பல மிரட்டல்களை எதிா்கொண்டுள்ளது என்பதையும் அதிகாரிகள் குறிப்பிட்டனா். சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், சந்தேகத்திற்குரிய நபா் ஒருவா் சட்டப்பேரவை நுழைவாயிலை மீறி உள்ளே நுழைய முயன்றது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கவலைகளை எழுப்பியது.
தொடர்புடையது
சொத்துவரியுடன் வணிக உரிமை கட்டணம் இணைப்பு: எம்சிடி அறிவிப்பு

மாநகராட்சி மேயா் தோ்தல்: பாஜக தீவிர ஆலோசனை

தண்ணீா் மீட்டா் அமைப்பை மாற்றியமைக்கும் தில்லி ஜல்போா்டு

ஏப். 29-ல் தில்லி மேயா் உள்பட 3 பதவிகளுக்கான தோ்தல்
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


