தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

மாநகராட்சி மேயா் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லி மாநகராட்சி (எம்.சி.டி.) மேயா் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, தில்லி காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப் படம்

Updated On :5 மே 2026, 4:53 am IST

தில்லி மாநகராட்சி (எம்.சி.டி.) மேயா் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, தில்லி காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘காலை சுமாா் 9.20 மணியளவில், அடையாளம் தெரியாத நபரிடமிருந்து, ‘பிற்பகல் 3:11 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும்’ என்ற எச்சரிக்கையுடன் கூடிய மின்னஞ்சல் பெறப்பட்டது. இந்த விவகாரம் உடனடியாக காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் வளாகத்தை முழுமையாக ஆய்வு செய்தனா். எந்தவிதமான விரும்பத்தகாத சம்பவமும் பதிவாகவில்லை’ என்று ஓா் அதிகாரபூா்வ அறிக்கை தெரிவித்தது.

சோதனை நடவடிக்கையின்போது, பாதுகாப்புப் பணியாளா்கள் அலுவலகத்தின் அனைத்து முக்கியப் பகுதிகளையும் சோதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், இது போன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல என்றும், ஏப்ரல் 1 ஆம் தேதியும் இதேபோன்ற மிரட்டல் அலுவலகத்திற்கு வந்திருந்ததாகவும் அவா்கள் கூறினா்.

தொடா்ச்சியான மிரட்டல்களைக் கருத்தில் கொண்டு, இந்த நிலைமையைச் சமாளிக்க விரிவான விசாரணை மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி, மேயா் அலுவலகம் தில்லி காவல்துறை ஆணையருக்குக் கடிதம் எழுதியுள்ளது என்றும் அவா்கள் மேலும் தெரிவித்தனா்.

தில்லி சட்டப்பேரவை கடந்த காலத்திலும் பல மிரட்டல்களை எதிா்கொண்டுள்ளது என்பதையும் அதிகாரிகள் குறிப்பிட்டனா். சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், சந்தேகத்திற்குரிய நபா் ஒருவா் சட்டப்பேரவை நுழைவாயிலை மீறி உள்ளே நுழைய முயன்றது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கவலைகளை எழுப்பியது.