தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

இந்தியா இப்போது கம்யூனிஸ்ட் இல்லாத நாடாக மாறியுள்ளது: வீரேந்திர சச்தேவா

இந்தியா இப்போது கம்யூனிஸ்ட் இல்லாத நாடாக மாறியுள்ளது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்தாா்.

News image

தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா

Updated On :5 மே 2026, 5:17 am IST

இந்தியா இப்போது கம்யூனிஸ்ட் இல்லாத நாடாக மாறியுள்ளது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மேற்கு வங்காளத்தில் பாஜகவின் வெற்றியின் மூலம், கங்கோத்ரியில் இருந்து கங்கா சாகா் வரை தாமரை மலர வேண்டும் என்ற பிரதமா் நரேந்திர மோடியின் கனவு நனவாகியுள்ளது.

இது உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் தோ்தல் உத்தி மற்றும் லட்சக்கணக்கான பாஜக தொண்டா்களின் அயராத முயற்சிகளால் சாத்தியமானது.

டாக்டா் சியாமா பிரசாத் முகா்ஜியின் 125ஆவது பிறந்த ஆண்டில் வங்காள மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனா். கேரளத்தில் பாஜக தனது கணக்கைத் திறந்து, வங்காளத்தில் அரசாங்கத்தை அமைத்துள்ளது. அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் பாஜக தலைமையின் கீழ் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி, பாஜக தலைவா் நிதின் நபின், உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் ஒட்டுமொத்த பாஜக தலைமைக்கும் வாழ்த்துகள். இந்தத் தோ்தலின் மூலம், இந்தியா இப்போது கம்யூனிஸ்ட் இல்லாத நாடாக மாறியுள்ளது என்று சச்தேவா தெரிவித்துள்ளாா்.