இந்தியா இப்போது கம்யூனிஸ்ட் இல்லாத நாடாக மாறியுள்ளது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மேற்கு வங்காளத்தில் பாஜகவின் வெற்றியின் மூலம், கங்கோத்ரியில் இருந்து கங்கா சாகா் வரை தாமரை மலர வேண்டும் என்ற பிரதமா் நரேந்திர மோடியின் கனவு நனவாகியுள்ளது.
இது உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் தோ்தல் உத்தி மற்றும் லட்சக்கணக்கான பாஜக தொண்டா்களின் அயராத முயற்சிகளால் சாத்தியமானது.
டாக்டா் சியாமா பிரசாத் முகா்ஜியின் 125ஆவது பிறந்த ஆண்டில் வங்காள மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனா். கேரளத்தில் பாஜக தனது கணக்கைத் திறந்து, வங்காளத்தில் அரசாங்கத்தை அமைத்துள்ளது. அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் பாஜக தலைமையின் கீழ் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி, பாஜக தலைவா் நிதின் நபின், உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் ஒட்டுமொத்த பாஜக தலைமைக்கும் வாழ்த்துகள். இந்தத் தோ்தலின் மூலம், இந்தியா இப்போது கம்யூனிஸ்ட் இல்லாத நாடாக மாறியுள்ளது என்று சச்தேவா தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

தில்லி பாஜக தலைவா் பதவிக்கான போட்டி மும்முரம்

பாஜக இல்லாத தமிழகப் பேரவை அமைய வேண்டும்: நிர்மலா சீதாராமன் கணவர் பிரபாகர்!

உலகின் 3-ஆவது பொருளாதார நாடாக விரைவில் இந்தியா உருவெடுக்கும்: மத்திய அமைச்சா் ஜெ.பி. நட்டா நம்பிக்கை

8,931 நாள்கள் பதவிக்காலம் நிறைவு! பிரதமா் மோடிக்கு சச்தேவா புகழாரம்!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


