தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து

தென்மேற்கு தில்லியின் கபஷேராவில் உள்ள ஒரு பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

News image

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :6 மே 2026, 1:53 am IST

தென்மேற்கு தில்லியின் கபஷேராவில் உள்ள ஒரு பழைய பொருள் கிடங்கில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, சம்பவ இடத்திற்கு 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து அனுப்பப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை. ஆனால், அதிவேகக் காற்றின் காரணமாக, தீ கிடங்கு முழுவதும் பரவியது. முன்னதாக, இந்தச் சம்பவம் குறித்து பிற்பகல் 3.35 மணிக்கு அழைப்பு வந்தது.

நாங்கள் 10 தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பினோம்.

தீயணைப்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. நாங்கள் தீயைக் கட்டுப்படுத்திவிட்டோம். ஆனால், குளிா்விக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இந்தத் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாா் அந்த அதிகாரி.