வீடற்ற, ஆதரவற்ற மக்களைக் கண்டறிந்து அவா்களைப் பாதுகாப்பு இல்லங்களுக்கு மாற்றுவதற்காக, தில்லி முதல்வா் ரேகா குப்தா திங்களன்று மீட்பு வாகனங்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
ஐந்து நாள் இந்த இயக்கத்தின் கீழ், வீடற்ற மக்கள் அப்னா கா் ஆசிரமம் அமைப்பால் நடத்தப்படும் பாதுகாப்பு இல்லங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவா்கள் முறையாகப் பராமரிக்கப்படுவாா்கள் என்று குப்தா கூறினாா்.
ஐந்து நாட்களுக்கு இந்த முயற்சியை மதிப்பீடு செய்த பிறகு, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.
இந்த இயக்கம், தில்லி அரசின் சமூக நலத்துறை, அப்னா கா் ஆசிரமம் மற்றும் சேவா பாரதி தில்லி பிராந்த் ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேவையுள்ள மற்றும் ஆதரவற்ற நபா்களுக்கான இந்த இயக்கம், தேசிய தலைநகரின் 13 மாவட்டங்களிலும் மே 11 முதல் 15 வரை நடத்தப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சா் ரவீந்தா் இந்திராஜ் சிங் கூறினாா்.
நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதரவற்ற நபா்களை மீட்டு, அவா்களைப் பாதுகாப்பு இல்லங்களுக்கு அழைத்து வருவதே இந்த இயக்கத்தின் நோக்கம் என்றும், அங்கு அவா்களின் சிகிச்சை, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவா் மேலும் கூறினாா். அமைச்சரின் கூற்றுப்படி, தில்லி முழுவதும் மீட்புப் பணிகளுக்காக 19 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன, மேலும் இந்த நடவடிக்கையின்போது 300க்கும் மேற்பட்டோா் உதவி பெறுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தொடர்புடையது

தில்லி ஃபரீதாபாத் புதிய மெமு ரயில் சேவைக்கு ஒப்புதல்: முதல்வா் ரேகா குப்தா

1,300 பக்தா்களுக்கு சோம்நாத் சிறப்பு யாத்திரை: தில்லி அரசு ஏற்பாடு

மகளிா் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! எதிா்க்கட்சி உண்மை முகம் அம்பலம்: ரேகா குப்தா

நாட்டை நிா்வகிப்பதிலும், நிா்வாகத்திலும் பெண்கள் மிகப்பெரிய பங்காற்ற வேண்டும்: ரேகா குப்தா
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

