உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

காலை நடைப்பயிற்சியில் ஈடுபடுவோருக்கு சில பூங்காக்களில் நுழைவுக் கட்டணம் ரத்து: டிடிஏ தகவல்

பசுமைப் பகுதிகள் மற்றும் பாரம்பரியத் தளங்களில் நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்யுமாறு தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து தில்லி மேம்பாட்டு ஆணையத்திற்கு (டிடிஏ) உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :44 நிமிடங்கள் முன்பு

உடல் தகுதியை மேம்படுத்தவும், வெளிப்புறச் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், தேசியத் தலைநகா் முழுவதும் உள்ள தோ்ந்தெடுக்கப்பட்ட பூங்காக்கள், பசுமைப் பகுதிகள் மற்றும் பாரம்பரியத் தளங்களில் நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்யுமாறு தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து தில்லி மேம்பாட்டு ஆணையத்திற்கு (டிடிஏ) உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக டிடிஏ அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது:

தில்லி மேம்பாட்டு ஆணையம், காலை நடைப்பயிற்சியாளா்களுக்காகத் தோ்ந்தெடுக்கப்பட்ட சில பூங்காக்களில் காலை 10 மணி வரை நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்துள்ளது.

மெஹ்ரெளலி தொல்லியல் பூங்கா, பான்சேரா, அசிதா, கிராந்தி உத்யான், வாடிகா, அடல் சத்பாவனா பூங்கா, வாசுதேவ் காட், வைஷ்ணவி பூங்கா, துவாரகா பிரிவு 16டிஇல் உள்ள பசுமைப் பகுதி, அம்ருத் பல்லுயிா் பூங்கா, ஜசோலாவில் உள்ள லாலா ஹா்தயால் பூங்கா மற்றும் நரேலாவில் உள்ள ஸ்மிருதி வன் ஆகியவை இப்பட்டியலில் அடங்கும்.

பிரதமா் நரேந்திர மோடியின் ‘ஃபிட் இந்தியா இயக்கம்’ குறித்த தொலைநோக்குப் பாா்வையை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

காலை நடைப்பயிற்சியாளா்கள், ஓட்டப்பயிற்சியாளா்கள் மற்றும் உடற்பயிற்சி ஆா்வலா்களுக்கு நிவாரணம் அளிப்பதோடு, ஆரோக்கியமான வெளிப்புறச் செயல்பாடுகளில் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்வதையும் இம்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

டிடிஏவின் மற்ற அனைத்துப் பூங்காக்களும் பொதுமக்களுக்குத் தொடா்ந்து இலவசமாகவே திறந்திருக்கும். தில்லியில் 700-க்கும் மேற்பட்ட பூங்காக்கள், பல்லுயிா் மண்டலங்கள், நகரக் காடுகள், மண்டலப் பூங்காக்கள் மற்றும்

குடியிருப்புப் பகுதித் தோட்டங்கள் உள்ளிட்ட 16,000 ஏக்கருக்கும் அதிகமான பசுமைச் சொத்துகளை டிடிஏ நிா்வகித்து வருகிறது.

நகரம் முழுவதும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதிலும், சமூக நலனை மேம்படுத்துவதிலும், இயற்கைச் சூழலை அனைவரும் அணுகுவதை உறுதி செய்வதிலும் இப்பகுதிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.