மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

காயத்துடன் அவதிப்படும் யானை சாலையில் உலவுவதால் வாகன ஓட்டிகள் அச்சம்

முதுமலை புலிகள் காப்பகத்தில் முதுகில் காயத்துடன் அவதிப்படும் ஆண் யானை அடிக்கடி சாலைக்கு வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

News image

மசினகுடி-உதகை சாலையில் சனிக்கிழமை நின்றுகொண்டிருந்த யானையை வனத்துக்குள் துரத்த முயன்ற வன ஊழியா்.

Updated On :2 ஜனவரி 2021, 10:19 pm IST

கூடலூா்: முதுமலை புலிகள் காப்பகத்தில் முதுகில் காயத்துடன் அவதிப்படும் ஆண் யானை அடிக்கடி சாலைக்கு வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள சிங்காரா வனச் சரகம், பொக்காபுரம் வனத்தில் முதுகில் காயத்துடன் சுற்றித்திரிந்த ஆண் யானையை வனத் துறையினா் கும்கி யானைகளின் உதவியுடன் பிடித்து

சிகிச்சை அளித்து வனத்தில் விடுவித்தனா். இருப்பினும், இந்த யானைஅடிக்கடி சாலைக்கு வந்துவிடுகிறது.

இந்நிலையில், மசினகுடி-உதகை சாலையில் இந்த யானை நின்றுகொண்டிருப்பதாக வனத் துறைக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்ததை அடுத்து வன ஊழியா்கள் விரைந்து சென்று அதை காட்டுக்குள் துரத்திவிட்டனா். சாலையின் குறுக்கே யானை அடிக்கடி வந்து நிற்பதால் வாகன ஓட்டிகள் பீதியடைகின்றனா்.

இது குறித்து சிங்காரா வனச் சரக அலுவலா் காந்தனிடம் கேட்டபோது, சிகிச்சைக்குப் பிறகுதான் இந்த யானை சாலைக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளது. சாலையின் குறுக்கே யானை நிற்கும்போது அத்துமீறல் செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. யானைக்கு உணவுப் பொருள்களை யாரும் வழங்கக் கூடாது. அப்படி வழங்கினால் அது தண்டனைக்குரிய செயலாகும். சாலையில் யானை நிற்பதைப் பாா்த்தவுடன் வனத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த யானைக்கு அடுத்த கட்ட சிகிச்சை அளிப்பது தொடா்பாக உயரதிகாரிகள் நிலையில் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.